நேற்று இரவு சுமார் 8.15 மணியளவில் கெரிக்கிலிருந்து ஜெலிக்கு செல்லும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் கி.மீ 11-ல் ஒரு நபர் வாகனம் ஓட்டிச் சென்றபோது யானைகள் கூட்டத்தால் அவரது கார் தாக்கப்பட்ட ஒரு பயங்கரமான அனுபவத்தைப் பெற்றார்.
38 வயதான ஓட்டுநர் இரவு 11.36 மணிக்குப் புகார் அளித்ததாகக் கெரிக் காவல்துறைத் தலைவர் சுல்கிஃப்லி மஹ்மூத் தெரிவித்தார்.
“சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணையில், ஜெலியிலிருந்து கெரிக்கிற்கு பயணித்த ஓட்டுநர், யானைகள் கூட்டம் சாலையைக் கடப்பதைக் கண்டார். அவர் தனது காரை நிறுத்திவிட்டு, ஹெட்லைட்களை அணைத்தார்”.
“பின்னர் அவருக்குப் பின்னால் ஒரு வாகனத்திலிருந்து ஒரு ஹாரன் சத்தம் கேட்டது, திடீரென்று மூன்று யானைகள் அவரது காரை நெருங்கின,” என்று சுல்கேப்லி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
தனது பாதுகாப்புக்கு பயந்து, ஓட்டுநர் வாகனத்தை விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். யானைகள் அப்பகுதியை விட்டு வெளியேறியபிறகு, அவர் போலீசில் புகார் அளித்தார்.
காரின் முன்பக்கம், பின்பக்கம் மற்றும் இருபுறமும் சேதம் ஏற்பட்டது, ஆனால் ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.
யானைகளால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் சேதமடைந்த வாகனத்தைக் காட்டும் காணொளி, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.