ஒபாமாவை கொல்ல ஒசாமா திட்டம் : பகீர் தகவல் அம்பலம்

அமெரிக்க மண்ணில் மிகப்பெரிய தற்கொலைப் படை தாக்குதல் நடத்த கடந்த ஆண்டு கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் திட்டமிட்டிருந்ததாகவும், அதோடு மட்டுமல்லாது அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமாவையும் கொல்ல சதித்தீட்டம் தீட்டியிருந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, அமெரிக்க ஊடகங்களில் சிஎன்என் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பீட்டர் பெர்கான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அபோதாபாத்தில், ஒசாமா படுகொலைக்குப் பிறகு அங்கு பலவிதமான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதில் கணினி நினைவகத்தில் உள்ள தகவலின்படி, அமெரிக்காவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருக்க வேண்டும், குடியரசுத் தலைவர் ஒபாமா, ஆப்கானிஸ்தானின் நேட்டோ படையின் கட்டளைத் தளபதி பெட்ரேயஸ் ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்த தகவல் அதில் பதிவாகியிருந்தது.

இதன்மூலம், அமெரிக்காவில் இரட்டைக்கோபுர தாக்குதல் போன்ற பெரிய தாக்குதல் நடைபெற இருந்தது தடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.