செக்ஸ் வீடியோ தொடர்பில் ஐஜிபி-இன் வாதம் புரியவில்லையே, தியான் சுவா

டத்தோ டி செக்ஸ் வீடியோ தொடரில் போலீசில் பொய்ப்புகார் செய்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என்று படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் அறிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா.

செக்ஸ் வீடியோவில் இருப்பவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இஸ்மாயில் அவ்வாறு கூறியிருப்பது “வியப்பளிப்பதாக” தியான் சுவா கூறினார்.

“குற்றவியல் நடைமுறை தொடர்பில் எல்லாம் தெரிந்தவராக இருக்கிறார் ஐஜிபி.   விசாரணை எல்லாம் முடிந்து விட்டதா? அதனால்தான் வீடியோவில் இருப்பவர் அன்வார் என்று சொல்ல வருகிறாரா அவர்? ”, என்று தியான் சுவா இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் வினவினார்.

நேற்று இஸ்மாயில், வீடியோவில் காணப்படும் நபர் தாமல்ல என்று மறுத்து பொய்யான போலீஸ் புகார் ஒன்றைப் பதிவு செய்ததற்காக அன்வார்மீது போலீஸ் விசாரணை தொடங்க எண்ணியிருப்பதாகக் கூறினார்.

அரசாங்க-ஆதரவு தொலைக்காட்சி நிலையமான டிவி 3ஈன் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது இவ்வாறு கூறிய இஸ்மாயில்,  விசாரணைகள் அன்வாரின் குதப்புணர்ச்சி வழக்கு முடிந்தபின்னர்தான் தொடங்கும் என்றார்.