அம்பிகாவுக்காக நடத்தப்பட்ட கூட்டத்தின் மீது முட்டைகளும் கற்களும் வீசப்பட்டன

பெர்சே 2.0 கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக  மலாக்கா மெர்லிமாவில் நடத்தப்பட்ட தேநீர் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு டிஏபி சட்டமன்ற உறுப்பினர்களையும் கட்சி ஆதரவாளர்களையும் கும்பல் ஒன்று தாக்கியுள்ளது.

தொடர்பு கொள்ளப்பட்ட போது ஆயர் குரோ சட்டமன்ற உறுப்பினர் கோ போய் தியோங் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.

அந்த நிகழ்வு முடிந்து புறப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தம்மையும் பண்டார் ஹிலிர் உறுப்பினர் தே கோக் கியூவையும் 200 பேர் கொண்ட கும்பல் ஒன்று தாக்கியதாக அவர் சொன்னார்.

“ஒரு கல் என் மீது விழுந்தது. எங்கள் வாகனங்கள் மீது முட்டைகள் விழுந்தன. எங்கள் உறுப்பினர்களில் ஒருவருடைய காரின் கண்ணாடி உடைந்து விட்டது,” என்றார் அவர்.