பிரிட்டீஷ் அரசிக்கு எதிரான ஹிண்ட்ராப் வழக்கு பதிவு செய்யப்பட்டது

ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் திரு பொ.வேதமூர்த்தி தலைமையில் வழக்கறிஞர்கள் குழு மற்றும் ஆதரவாளர்களுடன் ஜூலை 2 ஆம் தேதி மாலை 2 .00 மணியளவில் , வஞ்சிக்கப்பட்ட அனைத்து மலேசிய ஏழை  இந்தியர்களின் சார்பாகவும் மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் இராணிக்கு எதிரான வழக்கை லண்டன் உயர் நீதி மன்றத்தின் குவின்ஸ்  பெஞ்ச் பிரிவில் வெற்றிகரமாக பதிவு செய்தனர்.

வரலாற்றில்  உலகின் கால் பகுதி நிலப்பரப்பை ஆண்ட முன்னால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் தவறுகளுக்கு  அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்ற குறிக்கோளுடன்  இப்படி  ஒரு வழக்கு பதியப்படுவது இதுவே  முதல் முறையாகும். பிரிட்டிஷாரின் சட்ட மற்றும் தார்மீக பொறுப்புகளின் மீது இவ்வழக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

நிகழ்கால சட்ட  அவலங்களை மாற்றியமைக்கும் வழக்குகளில்  சாதனைகள் நிகழ்த்தி  லண்டனின் மிக பிரபல்யமாக திகழும் மனித உரிமை வழகுரைஞர்  திரு. இம்ரான் கான் நிறுவனம் இவ்வழக்கை கையாள்வது மேலும் ஒரு சிறப்பம்சமாக திகழ்கிறது என ஹிண்ட்ராப் தேசிய ஒருங்கிணைப்பாளர் W.சாம்புலிங்கம் இன்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறினார்.

TAGS: