வீட்டில் இருந்து வினோதினி மாயம்; கடத்தப்பட்டிருக்கலாம் என தாயார் சந்தேகம்!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காணமல்போனதாக கூறப்படும் தனது மகள் வினோதினி குனசேகரன் (வயது 14) கடத்தப்பட்டிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக தாயார் சிவபாக்கியம் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 24-ஆம் தேதி ஜொகூர் பாருவிலுள்ள தனது வீட்டிலிருந்து கடைக்குச் செல்வதாகக்கூறி வெளியே சென்ற வினோதினி இதுவரை வீடு திரும்பவில்லை.

எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. தேடுவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனளிக்காமல் போனது. ஒருவேளை கடத்தப்பட்டிருக்கலாம் என சிவபாக்கியம் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இவ்விஷயம் தொடர்பாக தனது மகளை விரும்பிய காதலனிடம் கேட்டபோது அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டார். தோழிகளை விசாரித்தபோது தங்களுக்கும் ஒன்று தெரியாது என்று கூறிவிட்டனர்.

மகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவளுடைய அடையாளர் அட்டை மற்றும் அவளது பொருட்கள் வீட்டில் இருக்க அவள் எப்படி ஓடிப்போயிருக்க முடியும். அவள் நிச்சயமாக கடத்தப்பட்டிருக்கலாம் என்று சிவபாக்கியம், நூசா ஜெயா காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

வினோதினியைப் பற்றியத் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக வினோதியின் தாயாருடன் தொடர்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொலைப்பேசி : 016 – 7859821 / 017 – 7298131

TAGS: