சுவாராம்மீது வழக்கு:சிசிஎம் இன்று ஏஜியைச் சந்திக்கிறது

சுவாராமின் வாகனமாக செயல்படும் சுவாரா இனிஷியேடிப் சென்.பெர்ஹாட்மீது வழக்கு தொடுக்குமாறு மலேசிய நிறுவனங்களின் ஆணையம்(சிசிஎம்) சட்டத்துதுறைத் தலைவரிடம் பரிந்துரைக்கும். 

இன்று கோலாலம்பூரில் சிசிஎம் தலைமையகக் கட்டிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உள்நாட்டு வாணிக, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப், இன்று மாலை மணி 4-க்குச் சட்டத்துறைத் தலைவரைச் சந்திக்கும்போது வழக்குத் தொடுக்கப் பரிந்துரைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

“அந்நிறுவனத்தின் கணக்குவழக்குகள் குழப்பமாக உள்ளன.அதனால் சட்ட நடவடிக்கை எடுக்கிறோம்”, என்றாரவர்.

எப்படிப்பட்ட குழப்பம் என்று வினவியதற்கு, “எல்லாவித குழப்பங்களும் உள்ளன.வழக்கு தொடுக்க ஆயத்தாகிக் கொண்டிருப்பதால் விவரங்களை வெளியிட முடியாது”, என்றார்.

“அவர்கள் சொல்வது ஒன்று செய்வது வேறொன்றாக இருக்கிறது”, என்றாரவர்.