கட்சித்தாவலை பிஎன் சாதாரணமாகக் கருதக்கூடாது

சாபா பாரிசான் நேசனலில் அடுத்தடுத்து நிகழ்ந்த கட்சித்தாவல்கள் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் “அதைச் சாதாரணமாகக் கருதக்கூடாது”என்று அம்னோ உதவித் தலைவர் முகம்மட் ஷாபி அப்டால் கூறியுள்ளார்.

“அதுவும் அரசியலில் ஒரு பகுதிதான்.எனவே அதைக் கடுமையான விவகாரமாகவே கருத வேண்டும் என்று நினைக்கிறேன்”, என்றாரவர்.

அதனால் தேர்தலில் பிஎன்னின் வெற்றி பாதிக்கப்படும் என்று அவர் கருதவில்லை.“ஏனென்றால் (கட்சித்தாவிய) தலைவரின் ஆதரவாளர்களும் மாறுவார்கள் என்று சொல்ல முடியாது”.

செப்டம்பர் 15-இல், சாபா அம்னோவின் முன்னாள் பொருளாளர் இப்ராகிம் மெனுடின் கட்சியிலிருந்து விலகி பிகேஆரில் சேர்ந்த சில மணி நேரங்களில் தஞ்சோங் ஆரு அம்னோ தொகுதி முன்னாள் தலைவர் யஹ்யா லம்போங்கும் பிகேஆருக்குத் தாவினார்.

TAGS: