டிபிகேஎல் பணியாளர்களுக்கு மாதம் ரிம200 ஊக்கத்தொகை

கோலாலம்பூர் மாநகராண்மைக் கழக அதிகாரிகளுக்கும் கிரேட் 52-இலும் அதற்குக் கீழ்நிலையிலும் உள்ள பணியாளர்களுக்கும் அடுத்த மாதத்திலிருந்து அமலாக்க ஊக்கத் தொகையாக (பிஐபி) மாதந்தோறும் ரிம200 ரிங்கிட் வழங்கப்படும்.

இதனைத் தெரிவித்த கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக் ராஜா சைனல் அபிடின், இந்த பிஐபி-க்கு பொதுச் சேவைத் துறை ஆகஸ்ட் முதல் நாள் ஒப்புதல் அளித்ததாகக்  கூறினார்.

“மாநகர் சொத்துகளைப் பாதுகாப்பது உள்பட சிறப்புப் பணிகளுக்கு பொறுப்பேற்றுள்ள அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் இந்த பிஐபி வழங்கப்படும்”,என்றவர் தெரிவித்தார்.

இதனால் 1,584டிபிகேஎல் ஊழியர்கள் பயனடைவர் என்று ராஜா நொங் சிக் கூறினார்.இது அவர்கள் மேலும் சிறப்பாக பணியாற்ற ஊக்கமளிக்கும்.

-பெர்னாமா

TAGS: