சுவாராமை இழுப்பதற்கு சங்கப்பதிவதிகாரி அலுவலகம் போலீசைப் பயன்படுத்துகிறது

சுவாராம் அலுவலகத்துக்குள் நுழையும் முயற்சிகளில் தோல்வி கண்ட சங்கப்பதிவதிகாரி அலுவலகம் இப்போது அந்த அரசு சாரா மனித உரிமைப் போராட்ட அமைப்பை இழுப்பதற்கு போலீஸ் படையைப் பயன்படுத்தியுள்ளது.

தனது விசாரணைகளுக்கு உதவுவதற்காக புத்ராஜெயாவுக்கு வருமாறு சுவாராம் ஆலோசகர் குவா கியா சூங், செயலக உறுப்பினர் சிந்தியா கேப்ரியல், சுவாராமைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான ஆர் சிவராசா ஆகியோருக்கு நேற்று சங்கப்பதிவதிகாரி அலுவலகம் நேற்று நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.

“அந்த நோட்டீஸ் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (Criminal Procedure Code) 111வது பிரிவின் கீழ் வருகின்றது. நாங்கள் அங்கு செல்லாவிட்டால் கைது செய்யப்படலாம். ஆகவே இப்போது போலீசார் சம்பந்தப்பட்டுள்ளனர்,” என சிந்தியா தொடர்பு கொள்ளப்பட்ட போது மலேசியாகினியிடம் தெரிவித்தார்.