மலேசியாகினி நாளிதழ் வெளியீட்டிற்கான உரிமம்: தீர்ப்பு இன்று

மலேசியாவின் முன்னணி செய்தி இணையதளமான மலேசியாகினி ஒரு நாளிதழை வெளியிடுவதற்கான உரிமத்திற்கு உள்துறை அமைச்சிடம் மனு செய்திருந்தது.

அம்மனுவை உள்துறை அமைச்சு நிராகரித்ததைத் தொடர்ந்து மலேசியாகினி உள்துறை அமைச்சின் மீது வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கின் விசாரணை முடிவுற்றதைத் தொடர்ந்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் மணி 4.30 க்கு அதன் தீர்ப்பை வழங்கவிருக்கிறது என்று மலேசியகினியின் தலைமை நிருவாகி பிரமேஷ் சந்திரன் தெரிவித்தார்.