Tanda Putera தாமதம் திரைப்படத் தணிக்கை வாரிய முடிவு என்கிறார் ராயிஸ்

Tanda Putera திரைப்படம் திரையிடப்படுவது வைக்கப்பட்டுள்ளது, தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சின் முடிவு அல்ல. இவ்வாறு அதன் அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறியிருக்கிறார்.

உள்துறை அமைச்சின் கீழ் வரும் திரைப்படத் தணிக்கை வாரியம் அதனைத் தள்ளி வைப்பது என முடிவு செய்துள்ளதாக அவர் சொன்னார்.

“அது தற்போது அதிகாரிகளுடைய கரங்களில் உள்ளது. அமைச்சரோ மற்ற நிறுவனங்களோ அல்ல. அதனைத் தள்ளி வைப்பது என தணிக்கையாளர்கள் முடிவு செய்தால் நாங்கள் அதனை ஏற்றுக் கொள்வோம்,” என கோலாலம்பூரில் நிகழ்வு ஒன்றில் நிருபர்களைச் சந்தித்த ராயிஸ் தெரிவித்தார்.

Tanda Putera திரையீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது, பொதுத் தேர்தலுடன் தொடர்புடையதாக இருக்கலாமா என வினவப்பட்ட போது “எனக்கு அது பற்றித் தெரியாது” என ராயிஸ் பதில் அளித்தார்.

மே 13க்கு பிந்திய காலத்தில் இரண்டாவது பிரதமர் அப்துல் ரசாக் ஹுசேனையும் துணைப் பிரதமர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மானையும் Tanda Putera சித்தரிக்கிறது.

பினாஸ் ஒத்துழைப்புடன் பெசோனா பிக்சர்ஸ் சென் பெர்ஹாட் 4.8 மில்லியன் ரிங்கிட் செலவில் அந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

இணையத்தில் வெளியான அந்தத் திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பெற்ற மே 13ஐ சித்தரிக்கும் சில காட்சிகள் தொடர்பில் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அது முதலில் செப்டம்பர் 13ம் தேதி திரையிடப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் அதனை நவம்பர் 15க்கு பினாஸ் மாற்றியது. அந்தத் திரைப்படம் மீதான விளம்பர நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ளப்படுவதற்கு திரையீடு தள்ளி வைக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது.

ஆனால் நவம்பர் மாதம் அணுகிய வேளையில் அதன் வெளியீடு இரண்டாவது முறையாக தள்ளி  வைக்கப்படும் என்ற வதந்திகள் வெளி வரத் தொடங்கின.

அதனை Tanda Putera இயக்குநர் ஷுகாய்மி பாபா உறுதிப்படுத்தினார். ஆனால் பினாஸ் இயக்குநர் நகுய்ப் ரசாக் காரணத்தை விளக்க மறுத்து விட்டார்.

TAGS: