ரிம40 மில்லியன் அன்பளிப்பு: பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்

சபா அம்னோவுக்கு அளிக்கப்பட்ட ரிம40 மில்லியன் குறித்து விளக்கம் அளிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த சட்டத்துறைக்கான பிரதமர் இலாகா அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் இதில் சம்பந்தப்பட்டிருந்தவருடன் தொடர்பு கொண்டிருந்த விவகாரத்தில் சிக்கியிருப்பதால், பிரதமர் நஜிப் அந்த அன்பளிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.

“சபா அம்னோவுக்கு மைக்கல் சியாவால் அளிக்கப்பட்ட ரிம40 மில்லியன் அன்பளிப்பு ஊழல் பற்றியும், நஸ்ரி தன்னல அக்கறை மோதல் கோட்பாடுகளை மீறியுள்ளாரா என்பது குறித்தும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதிகாரப்பூர்வமான அறிக்கையை நாடாளுமன்றத்தில் நாளை திங்கள்கிழமை தாக்கல் செய்ய வேண்டும்”, என்று கிட் சியாங் நேற்று விடுத்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.