நுருல் இஸ்ஸா நாளை ஜயிஸில் புகார் செய்வார்

சமய நம்பிக்கையற்ற நிலை என்னும் பிரச்னை மீது தாம் தவறாக குற்றம் சாட்டப்படுவதாக தாம் கூறிக் கொள்வதற்கு எதிராக பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில இஸ்லாமிய விவகாரத் துறையில் புகார் செய்யவிருக்கிறார்.

நாளை காலை 11.00 மணி வாக்கில் தாம் அந்தப் புகாரை ஜயிஸ் இயக்குநரிடம் கொடுக்கப் போவதாக அவர் சொன்னார்.

“நான் உண்மையில் சொன்னதாக அடிப்படையாகக் கொள்ளாமல் உத்துசான் மலேசியா செய்திகள் அடிப்படையில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதால் நான் அந்தப் புகாரை சமர்பிக்கிறேன்,” என்றார் அவர்.

TAGS: