போலீஸ் படையின் நேர்மை உயர்வுக்கு ரிம200 மில்லியன்

மலேசிய போலீஸ் படையின் நேர்மை உயர்த்தப்படுவதற்கு அரசாங்கம் ரிம200 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீட்டை அளிக்கும் என்று பிரதமர் நஜிப் நேற்று அவரது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

இதனுடன், 2012 ஆண்டில் போலீஸ் படையின் மேம்பாட்டு செலவிற்காக ரிம442 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார். போலீசாருக்கான வீடுகள், தகவல் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்குதல் மற்றும் போலீஸ் தலைமையகங்கள், நிலையங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆகியவற்றின் மேம்பாட்டிற்காகவும் அந்த ஒதுக்கீடு பயன்படுத்தப்படும் என்றாரவர்.