சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கலைப்பது மீது பக்காத்தான் பேராளர்களை மந்திரி புசார் காலித் சந்திப்பார்

khalidசாப் கோ மே கொண்டாட்டங்களுக்குப் பின்னர் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்கும் சாத்தியம் குறித்து விவாதிப்பதற்காக அந்த மாநில மந்திரி புசார் காலித் இப்ராஹிம்  இந்த வாரம் பக்காத்தான் ராக்யாட் சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பார்.

“நாங்கள் பின்னர் அறிவிப்பு கொடுப்போம். நாங்கள் அவர்களை இந்த வாரம் சந்திப்போம்,” என அவர் இன்று ஷா அலாமில் மாநில ஆட்சி மன்றக் கூட்டத்துக்கு பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

பொதுத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை என்றால் சாப் கோ மே-க்குப் பின்னர் சட்டமன்றத்தைத் தமது அரசாங்கம் கலைக்கும் என காலித் ஜனவரி 30ம் தேதி கூறியிருந்தார்.

“சாப் கோ மே-க்குப் பின்னர் பொதுத் தேர்தலுக்கான தேதி பற்றிப் பிரதமர்  எந்த அறிவிப்பும் செய்யாவிட்டால் நாங்கள் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்கத் திட்டமிட்டுள்ளோம்,” என அவர் சொன்னதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

TAGS: