டிஏபி ஆண்டறிக்கை சங்கப் பதிவதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதால் ஹிஷாம் மன்னிப்புக் கேட்க வேண்டும்

hishamடிஏபி கட்சி தனது ஆண்டறிக்கையை இன்னும் சங்கப் பதிவதிகாரிக்கு (ROS) அனுப்பவில்லை என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ‘பொய்’ உரைத்துள்ளதாக இன்று அந்தக் கட்சி குற்றம் சாட்டியது.

அத்தகையை தவறான அறிக்கையை வெளியிட்டதற்காக அமைச்சர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.

2012-க்கான ஆண்டறிக்கையை டிஏபி புத்ராஜெயாவில் உள்ள சங்கப் பதிவதிகாரிக்கு பிப்ரவரி 8ம் தேதி அனுப்பியுள்ளதாக கோலாலம்பூரில் அந்தக் கட்சியின் தலைமையகத்தில் லோக் நிருபர்களிடம் தெரிவித்தார்.

சங்கப்பதிவதிகாரி முத்திரையிடப்பட்டு கையெழுத்திடப்பட்ட கடிதம்  ( cover letter ) ஆதாரமாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

 

TAGS: