‘சிறுபான்மை இனங்களுடைய பண்பாடுகளைப் பாதுகாக்கும் கட்சியை ஆதரியுங்கள்’

Nazriசிறுபான்மை இனங்கள் தங்களது பண்பாடுகளை எந்த விதமான தடையுமின்றி பின்பற்றுவதை உறுதி செய்யும் கட்சிக்கு மக்களுக்கு வலுவான ஆதரவை அளிக்க வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார்.

எதிர்க்கட்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலங்களில் தங்களது பண்பாடுகளையும் பாராம்பரியங்களையும் பின்பற்றுவதற்கான தங்கள் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சீனர்களும் இந்தியர்களும் புகார் செய்வதாக அவர் சொன்னார்.

“ஆகவே மக்கள் வாக்களிக்கும் தலைவர்கள் தங்கள் சொந்த இனத்துக்கு மட்டுமே சாதகமாக நடந்து கொள்ளக் கூடாது. இன, சமய வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் அவர்கள் ஆதரவும் உதவியும் வழங்க வேண்டும்,” என்றார் அவர்.

சீனப் புத்தாண்டை ஒட்டி நேற்றிரவு கோலாலம்பூர் கெப்போங்கில் யுவன் லோங் பௌத்த ஆலயம் ஏற்பாடு செய்திருந்த ஒரே மலேசியா விருந்தில் நஸ்ரி பேசினார். அற நிதிகளுக்கு நன்கொடை திரட்டும் பொருட்டு அந்த விருந்து நடத்தப்பட்டது.

கெரக்கான் தலைவர் கோ சூ கூன், அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் உட்பட பல இனங்களையும் சேர்ந்த 4,000க்கும் மேற்பட்ட மக்கள் அதில் கலந்து கொண்டிருந்தனர்.

-பெர்னாமா

TAGS: