‘இல்லாத தொகுதிகளுக்கு வாக்காளாராகப் பதிவு செய்யப்பட்டுள்ள மாது’

charles-santiagoதாம் வாக்காளராகப் பதிந்து கொண்டதே இல்லை எனக் கூறிக் கொள்ளும் ஒரு மாது தாம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆனால் இல்லாத சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்துள்ளார்.

அந்தத் தகவலை கிள்ளான் எம்பி சார்லஸ் சண்டியாகோ இன்று வெளியிட்டார்.

பிரிண்டா ஜோதாபாரா என்ற அந்த மாது ‘பண்டார் ஷா அலாம்’ சட்டமன்றத் தொகுதியிலும் ‘பட்டர்வொர்த் நாடாளுமன்றத் தொகுதியிலும்’ தாம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

“அவரை யார் பதிவு செய்தார்கள் என்பதே இப்போதைய கேள்வி,” என சார்லஸ் கோலாலம்பூரில் நிருபர்கள் கூட்டத்தில் வினவினார்.