“டாக்டர் மகாதீர் இப்ராஹிம் அலிக்கு அளிக்கும் ஆதரவு அவருக்கு ‘பாதகமானது’

அலிபெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலியை பகிரங்கமாக அங்கீகரித்ததின் மூலம் முன்னாள் பிரதமர் டாக்டர்  மகாதீர் முகமட் ‘தமக்கும் தமது கடந்த காலத்திற்கும் பாதகத்தை’ ஏற்படுத்தியுள்ளதாக பிகேஆர் உதவித்  தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறியிருக்கிறார்.

தமது மலாய் மேலாண்மை எண்ணங்கள் மூலம் இந்த நாட்டில் இனப் பதற்றத்தைத் தூண்டுவதாக குற்றம்
சாட்டப்பட்டுள்ள இப்ராஹிம் அலி போன்ற பலர் நாட்டுக்குத் தேவை என மகாதீர் பகிரங்கமாக
அங்கீகரித்துள்ளது, பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் வலியுறுத்தி வருகின்ற ஒரே மலேசியா
கோட்பாட்டுக்கு செய்யும் துரோகம் என்றும் அவர் சொன்னார்.
அலி1

கடந்த காலத்தில் மகாதீரும் இப்ராஹிமும் தெரிவித்த கருத்துக்களிலிருந்து நஜிப் தம்மை விலக்கிக் கொள்ள
முடியாது என்றும் நுருல் இஸ்ஸா சொன்னார்.

“மகாதீரும் இப்ராஹிமும் விடுத்துள்ள அறிக்கைகளிலிருந்து நஜிப் தம்மை விடுவித்துக் கொள்ள முடியாது
என்பதை மலேசிய வாக்காளர்கள் உணர வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.”

நுருல் இஸ்ஸா முன்னதாக கெரிஞ்சி குறைந்த விலை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச உடல்
ஆரோக்கிய சோதனைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். எஸ்பிஎம் தேர்வில் மெச்சத்தக்க மதிப்பெண்களைப்
பெற்றவர்களுக்கும் அவர் அன்பளிப்புக்களையும் வழங்கினார்.

 

TAGS: