சிலாங்கூரையும் கெடாவையும் பிஎன் கைப்பற்றும் : ஃபெங் ஷுய் நிபுணர் ஆருடம்

1predic13வது பொதுத் தேர்தலில் பிஎன், கூட்டரசு நிலையில் வெற்றி பெறுவதுடன் சிலாங்கூரையும் கெடாவையும் திரும்பவும் கைப்பற்றும் என பெங் ஷூய் நிபுணர் ஒருவர் கணித்திருக்கிறார்.

டேவிட் கோ என்னும் அந்நிபுணர், பினாங்கில் பிஎன் கூடுதல் இடங்களில் வெற்றிபெறும் என்றும் ஆருடம் கூறியுள்ளார்.

ஆனால், நெகிரி செம்பிலான், பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் பிஎன் கூடுதல் எதிர்ப்பைச் சந்திக்கும்.

முன்னதாக, பெர்னாமா டிவியிடம் 13வது பொதுத் தேர்தல் மே 5-இல்தான் நடக்கும் என்று ஆருடம் கூறியிருந்ததாகவும் தம் கணிப்பு சரி என்பது இப்போது நிரூபணமாகிவிட்டது என்றும் கோ கூறினார்.

1predic1அவருடைய ஆருடத்தைப் பலர் ஒதுக்கித் தள்ளியபோதும், கோ மனம் தளரவில்லை. தம் கணிப்பு ஃபெங் ஷூயை அடிப்படையாகக் கொண்டது என்றாரவர்.

“கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர் பல உருமாற்றத் திட்டங்களை அமல்படுத்திடக் கண்டோம். பொதுத் தேர்தலில் யார் வெல்வார் யார் தோற்பார் என்பதை முன்னறிந்து கூற சரியான முறையில் கணிக்க வேண்டும். வெற்றி அதிர்ஷ்டத்தை மட்டும் பொறுத்ததல்ல. அது, அரசியல்வாதிகள் மக்களின் நன்மைக்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதையும் பொறுத்துள்ளது”, என்றார்.

மலேசியர்கள்  முதிர்ச்சி பெற்றவர்கள், விவேகமாக முடிவு செய்யக்கூடியவர்கள் என்று நம்பும் அவர், தேர்தல் முடிவுகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

-பெர்னாமா

TAGS: