விஜய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 14, 2013.

இந்நாட்டு இந்திய மக்கள் அனைவருக்கும்  இனிய விஜய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்விஜய சித்திரைப் புத்தாண்டு, இந்நாட்டுக்கும் நாட்டு  மக்களுக்கும் வெற்றியை அளிக்க வேண்டும். நாட்டில் செல்வங்களின் சீரழிவை தடுக்க வேண்டும். ஊக்கமுடன் ஒற்றுமையும், புரிந்துணர்வும் அனைத்து மக்களிடமும்  வளர வேண்டுகிறேன்.

நமது நாட்டின் 55 ஆண்டு கால வரலாற்றில் மக்கள் முற்றிலும் மாறுபட்ட  சூழ்நிலையில் விஜய சித்திரைப் புத்தாண்டை  வரவேற்கின்றனர். அதற்கு ஏற்ப மாற்றத்தின்  அனுகூலம்  எல்லா மலேசியர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

இந்த இனிய வேளையில் நமக்குக் கிடைக்கும் பாக்கியங்கள் நாம் நாட்டில் வாழும் மக்கள் அனைவருக்கும் கிட்டவேண்டும். அதே போல் நாட்டின் வளமும் செழிப்பும் நமக்கும் கிட்ட வேண்டும். நமது முன்னோர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு, நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவே அர்ப்பணிப்பும், பல தியாகங்களும் செய்துள்ளனர்.

அவர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்நாட்டில் அவர்கள் பிள்ளைகள் அடிமையாக வாழ இடம் வகுக்கவில்லை. சிறப்பாக வாழ அனைவருக்கும் இங்கு இடமுண்டு, நாட்டில் வளமுண்டு, மார்க்கமுண்டு. சமத்துவமான நாட்டில் அனைவருக்கும், எல்லா வாய்ப்பும், வசதிகளும் பெற வழியுண்டு. .ஆனால், அன்று அதனை மறுப்பவர்களை நாம் அடையாளங்காணத் தவறி விட்டோம்.

நமது பிள்ளைகளும் அவர்களின் தலைமுறைகளும் அதனை மீண்டும் அடையச் சரியான அடித்தளமிட இப்போதுள்ள வாய்ப்பினை தவறவிட்டால் எதிர்காலச் சந்ததி நம்மை நிந்திக்கும் என்பதனை மனதில் நிறுத்தி, விஜய சித்திரைப் புத்தாண்டை வெற்றியளிக்கும்  திருநாளாகக் கொண்டாடுவோம். அனைவருக்கும் பாக்காத்தான்  சார்பிலும், சிலாங்கூர் மாநில அரசின்  சார்பிலும் எனது விஜய சித்திரைப் புத்தாண்டு  நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

TAGS: