அரசியல் வன்முறைகள் மீதான புலனாய்வை விரைவுபடுத்துங்கள் என அன்வார் போலீசாருக்கு வேண்டுகோள்

anwarஅண்மைய அரசியல் வன்முறைகள் சம்பந்தப்பட்ட புலனாய்வுகளை தொழில் ரீதியாக மேற்கொண்டு விரைவாக  தீர்வு காணுமாறு போலீசாரை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

“அந்த வன்முறைகளுக்கு யார் பொறுப்பு என்பதை போலீசார் வேகமாகக் கண்டு பிடித்து மக்களுக்குத்  தெரிவிக்க வேண்டும்,” என அன்வார் இன்று பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.

அந்த வன்முறைகளுக்குப் பின்னணியில் பக்காத்தான் ஆதரவாளர்கள் இருப்பதாக குற்றம் சாட்டி முக்கிய
நாளேடுகளில் பிஎன் பிரச்சாரம் செய்வதைத் தடுப்பதற்கு அது உதவும் என அவர் சொன்னார்.

“அந்த விவகாரத்தைப் போலீசார் தொழில் ரீதியாக கையாளுவதும் முக்கியம்,” என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

 

TAGS: