பண்டானில் சந்தேகத்துக்குரிய வாக்காளரை பிகேஆர் முறியடித்தது

13சிலாங்கூர் பண்டானில் பிகேஆர் தேர்தல் ஏஜண்டுகள் ஆட்சேபித்ததைத் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

அந்தத் தகவலை பிகேஆர் பண்டான் வேட்பாளர் ராபிஸி இஸ்மாயில் வெளியிட்டார்.

சியோக் லியிங் இயூ என்ற பண்டான் வாக்காளர் ஒருவர்,  பதிவு செய்யப்பட்ட தமது முகவரியில் சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவர் இருப்பதாக தமது குழுவுக்குத் தகவல் கொடுத்திருந்ததாக அவர் சொன்னார்.

“சந்தேகத்துக்குரிய அடையாளக் கார்டு எண்களை நாங்கள் எங்களுடைய தேர்தல் ஏஜண்டுகளிடம் கொடுத்து வைத்திருந்தோம். தேர்தல் எழுத்தர் அந்த அடையாளக் கார்டு எண்ணை வாசித்ததும் எங்கள் தேர்தல் ஏஜண்டு ஆட்சேபம் தெரிவித்தார்.

“எங்கள் ஆட்கள் ஆட்சேபம் தெரிவித்ததும் ( சந்தேகத்துக்குரிய அந்த வாக்காளரிடம்) அவர் வாக்களிக்காமல் புறப்பட்டு விட்டார். நாங்கள் அவரை பிடிக்க முடியவில்லை,” என ராபிஸி அம்பாங் போலீஸ் மாவட்ட தலைமையகத்திற்கு வெளியில் நிருபர்களிடம் கூறினார். பின்னர் அவர் அந்த விவகாரம் பற்றிப் போலீசில் புகார் செய்தார்.

அவருடன் சியோக்கும் தமது வீட்டு முகவரியில் பல அடையாளம் தெரியாத பல வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்த இன்னொரு பண்டான் வாக்காளரான சிவப்பிரகாசம் கருப்பையாவும் சென்றிருந்தார்.

TAGS: