அஸ்மின்: பிகேஆர் கட்சியில் நான் தொடருவேன், மந்திரி புசார் பதவி மீது இணக்கம் தேவை என்கிறார்

azminபிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி எல்லா ஊகங்களையும் மறுத்து தாம் தொடர்ந்து கட்சியில் இருக்கப்  போவதாக அறிவித்துள்ளார்.

கோம்பாக் எம்பி-யாகவும் புக்கிட் அந்தாரா பாங்சா சட்டமன்ற உறுப்பினராகவும் தம்மைத் தேர்வு செய்த மக்களுடைய நம்பிக்கைக்கு தாம் துரோகம் செய்யப் போவதில்லை என்றும் அவர் சொன்னார்.

“தொடர்ந்து கனவு காணுங்கள். தேர்வு செய்யப்பட்ட துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் எனக்கு இல்லை.”

“அடுத்ததாக, மிக முக்கியமாக தங்களது எம்பி-யாகவும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினராகவும் என்னைத் தேர்வு  செய்த மக்களுடைய நம்பிக்கைக்குத் துரோகம் செய்ய மாட்டேன்,” என அஸ்மின் சொன்னார்.

சிலாங்கூர் மந்திரி புசார் பதவியை தாம் நாடுவதாக சொல்லப்படுவது முற்றிலும் தவறானது எனக் குறிப்பிட்ட அவர், கட்சியின்  இணக்கம் இல்லாமல் அந்தப் பதவி குறித்த முடிவு எடுக்கப்படுவதாக சிலாங்கூர் பிகேஆர் தலைமைத்துவம் கவலை அடைந்துள்ளது என்று மட்டும் அவர் கூறிக் கொண்டார்.

TAGS: