கோ சூ கூன் பதவி துறக்கிறார், கெராக்கான் அமைச்சரவையில் சேராது

kohகெராக்கான் கட்சித் தலைவர் கோ சூ கூன் -னும் தலைமைச் செயலாளர் தெங் சாங் இயாவ் -வும் அடுத்த வாரம் தங்கள் கட்சிப் பதவிகளிலிருந்து விலகிக் கொள்கின்றனர்.

கோலாலம்பூரில் இன்று கட்சித் தலைமையகத்தில் சக கெராக்கான் தலைவர்களை சந்தித்த பின்னர் கோ அந்தத் தகவலை அறிவித்தார்.

13வது பொதுத் தேர்தலில் கெராக்கான் மோசமான அடைவு நிலையைப் பெற்றதற்குப் பொறுப்பேற்று தாங்கள் பதவி துறப்பதாக அவர் மேலும் சொன்னார்.

கட்சியின் தேர்தல் நடைமுறை தொடங்கும் ஜுன் மாதம் வரையில் துணைத் தலைவர் சாங் கோ யூன் இடைக்காலத் தலைவராக செயல்படுவார்.

மசீச-வைப் போன்று கெராக்கானும் கூட்டரசு அமைச்சரவையில் எந்தப் பதவிகளையும் ஏற்றுக் கொள்ளாது என்றும் கோ கூறினார். என்றாலும் அதற்குப் பதில் மாநிலத் தலைமைத்துவப் பதவிகளை கெராக்கான் ஏற்றுக் கொள்ளும் என்றார் அவர்.

 

TAGS: