வேதமூர்த்தி (Way-togo-moorthy) உங்கள் மாயா ஜாலம் வேலை செய்துள்ளது

waythaஉங்கள் கருத்து : “வேதா- துறைப் பொறுப்பு இல்லாத அமைச்சர். அதுவும் பின்கதவு வழியாக. அவர் என்ன செய்ய  முடியும் என்பதைப் பார்ப்போம்”

புதிய அமைச்சரவை: வேதா, கைரி, பால் லோ நியமனம்; மசீச இடம் பெறவில்லை

போலிகால்50: என்ன ? ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி துணை அமைச்சரா ? பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களே இந்தியர்கள் அவரை விரும்பவில்லை. அவர் எந்தப் பசையும் இல்லாதவர்.  இந்தியர்களைக் கவனிக்காமல் தம்மை மட்டுமே கவனித்துக் கொள்ளும் மோசடிக்காரர் அந்த வேதமூர்த்தி.

மலேசியா54: வேதமூர்த்தி, உங்கள் உண்ணாவிரதம் உங்களுக்கு நன்மையைச் செய்துள்ளது. ஆகவே
இது தான் நீங்கள் விரும்பியதா ? மற்றவர்கள் சொன்னது உண்மையென இப்போது எங்களுக்குத்
தெரிகிறது.

சீ ஹோ சியூ: நாம் சந்தேகப்பட்டது போல வேதமூர்த்தி நஜிப்புடன் ஒத்துழைத்ததற்குக் காரணம்
உள்ளது. அது ஏன் என்பதும் நமக்குத் தெரிந்து விட்டது. அவரை வாங்குவதற்கு சாதாரண துணை
அமைச்சர் பதவி ஒன்று மட்டும் போதும்.

எதுவும் நடக்கும்: வேதா- துறைப் பொறுப்பு இல்லாத அமைச்சர். அதுவும் பின்கதவு வழியாக. அவர்
என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம். ஒரு வேளை அவர் நாடாளுமன்றத்தில் மீண்டும்
உண்ணாவிரதம் இருக்கலாம்.

குவிக்னோபாண்ட்: அற்புதம். தாய்மொழிப் பள்ளிகளை ஒழிக்கப் போவதாக அம்னோ மருட்டியுள்ள
வேளையில் வேதா துணை அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறார். வேதாவால் முடியும்
(உண்மையாக). இந்திய சமூகத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகளைப் பற்றி அவ்வாறு சொல்ல
முடியாது.

ஹெர்மிட்: கௌரவமிக்க பி வேதமூர்த்தி அவர்களுக்கு துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு
வாழ்த்துக்கள். உங்கள் மாயா ஜாலம் வேலை செய்துள்ளதாகத் தெரிகிறது.

வீரா: அவர் நஜிப்புக்கு உதவி செய்தார். துணை அமைச்சர் பொறுப்பைக் கொடுத்து நஜிப் இப்போது
அவருக்கு உதவி செய்துள்ளார். ஆகவே அந்த மகஜரில் கண்ணுக்குப் புலப்படாத அம்சம்
தெளிவாகியுள்ளது.

பிஎஸ்: வேதா, ஒரங்கட்டப்பட்ட இந்தியர்களுடைய சிவப்பு நிற அடையாளக் கார்டுகளை நீல நிற
அடையாளக் கார்டுகளாக மாற்றுவதற்கான வழியைக் காணும் நிலையிலும் குற்றச்செயல்களில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய இளைஞர்கள் எண்ணிக்கையை குறைக்கும் மாயவித்தையை செய்யும் நிலையிலும் இப்போது நீங்கள் இருக்கின்றீர்கள் என நாங்கள் நம்புகிறோம்.

மறத்தமிழன்: இந்தியர்கள் சிறிது நம்பிக்கை வைத்த பக்காத்தான் அதிகாரத்துக்கு வரவில்லை. அதனால் இந்தியர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பை அவர்கள் வேதாவுக்குக் கொடுக்க வேண்டும்.

2008ம் ஆண்டு தொடக்கம் அவரும் அவரது சகோதரர் உதயகுமாரும் ஹிண்ட்ராப்புடன் இந்தியர்களுடைய அவலத்தைப் போக்குவதற்கு போராடி வருகின்றனர்.

இப்போது வேதா உள் வட்டத்துக்குள் இருப்பதால் இந்தியர்களுடைய துயரங்களைப் போக்குவதற்கு
அவர் நஜிப்புடன் தாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள புதிய உறவுகளைப் பயன்படுத்திக் கொள்வார் என
பிரார்த்தனை செய்வோம்.

உதயா இந்தியர் நலன்களை மேம்படுத்தும் தமது சகோதரரின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். நீங்கள் இருவரும் உண்மையில் இந்தியர்களுக்காக போராடுகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

சைக்கோ: வேதாவுக்கும் ஹிண்ட்ராப்புக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பெருந்திட்டத்தை தொடருங்கள்.
இந்தியர்களுக்கும் மற்ற சிறுபான்மை சமூகங்களுக்கும் நீங்கள் நிறையச் செய்ய வேண்டியுள்ளது. இது நல்ல சந்தர்ப்பம். ஹிண்டராப் நல்ல முடிவைச் செய்துள்ளது.

ரெத்னம்: கம்போங் புவா பாலா பிரச்னையை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தீர்க்க முயன்ற போது பேனாவைக் கொண்டு கையெழுத்திடுவதின் மூலம் அவர் பிரச்னையைத் தீர்த்து விடலாம் என வேதா அவரைச் சாடினார்.

இப்போது இந்தியர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு கையெழுத்திட வேதாவுக்கு பல பேனாக்கள்
தேவைப்படும்.

 

TAGS: