உங்கள் கருத்து : “மற்ற நாடுகளில் புதிய வீட்டைத் தேடுமாறு மலேசியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களைக் கேட்டுக் கொள்வது தான் உள்துறை அமைச்சர் என்ற முறையில் ஸாஹிட்டின் முதலாவது பணியாகும்”
13வது பொதுத் தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி அடையாதவர்கள் வேற்று நாடுகளில் குடியேறலாம் என ஸாஹிட் சொல்கிறார்.
ஸ்டார்ர்: மே 5 பொதுத் தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி அடையாத மலேசியர்கள் வேற்று நாடுகளுக்கு குடியேறலாம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவர் சொல்லியிருப்பது மிகவும் கொடுமையானது.
புதிய உள்துறை அமைச்சர் ஸாஹிட் ஹமிடி விடுத்துள்ள அந்த அறிக்கை உண்மையில் நஜிப்பின் புதிய அமைச்சரவையின் நேர்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
மக்கள் தேர்தலில் தங்கள் பதிலைச் சொல்லி விட்டதால் அவர்களுடைய உணர்வுகளை ஸாஹிட் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
செலுத்தப்பட்ட வாக்குகளில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற பின்னர் அரசாங்கத்தை அமைத்துள்ள அம்னோ/பிஎன் தேர்தல் தொகுதிகளில் தில்லுமுல்லு செய்ததின் மூலமே அதனை அடைந்துள்ளது.
சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை சட்டப்பூர்வமாக்கி அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ததது
இன்னொரு தேர்தல் மோசடியாகும்.
வாழ்க்கை தொடருகிறது: மற்ற நாடுகளில் புதிய வீட்டைத் தேடுமாறு மலேசியர்களில் பாதிக்கும்
மேற்பட்டவர்களைக் கேட்டுக் கொள்வது தான் உள்துறை அமைச்சர் என்ற முறையில் ஸாஹிட்டின்
முதலாவது பணியாகும்.
உண்மை: மார்ச் 22ம் தேதி ஜகார்த்தா போஸ்ட் என்னும் நாளேட்டில் வெளியான செய்தி இது:
‘மலேசியத் தற்காப்பு அமைச்சர் ‘தமது இல்லத்திற்கு’ வருகை புரிகிறார்’
ஜோக்ஜகார்த்தாவுக்குச் சென்றிருந்த மலேசியத் தற்காப்பு அமைச்சர் தமது ஜாவா பரம்பரை குறித்த
தகவலை வெளியிட்டார். தமக்கு ஜாவா ரத்தம் ஒடுகிறது என்றும் தனது தந்தை வழி தாத்தா
ஜோக்ஜகார்த்தாவில் உள்ள குலோன்புரோகோவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார்.
“நான் என் இல்லத்திற்கு வருகிறேன்” என ஸாஹிட் ஜகார்த்தா போஸ்ட் பத்திரிக்கையிடம் சொன்னார்.
அவர் ஜகார்த்தா அனைத்துலக தற்காப்பு கலந்துரையாடலில் கலந்து கொள்ள அங்கு சென்றிருந்தார்.
ஜோக்ஜகார்த்தாவில் இருந்த போது ஸாஹிட் அதன் மேயர் ஹார்யாடி சுயுத்தி, ஜோக்ஜகார்த்தா
சுல்தானுடைய சகோதரர் GBPH Joyokusumo உட்பட பல நண்பர்களையும் சந்திக்க எண்ணியுள்ளார்.
1932ம் ஆண்டு தமது தாத்தா குலோன்புரோகோவிலிருந்து மலேசியாவுக்கு குடியேறியதாகவும் தமது
தாயாரின் தாத்தா கிழக்கு ஜாவா பொனோரோகோவிலிருந்து வந்தவர் என்றும் அவர் பின்னர் மலேசிய
மாது ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார் என்றும் ஸாஜிட் சொன்னார்.
மலேசியன் சுனாமி: ஸாஹிட் அவர்களே என் தாத்தா உங்கள் தாத்தாவுக்கு முன்னரே மலாயாவுக்கு
வந்திருந்தால் யாராவது ஒருவர் உங்களை ‘பெண்டாத்தாங்’ என அழைக்கலாமா ?
ரிபார்மசி: உங்களைப் போன்று இதுவும் என்னுடைய நாடு.
டாக்: ஆகவே நாட்டை விட்டு வெளியேறுமாறு 51.78 விழுக்காடு மலேசியர்களை ஸாஹிட் கேட்டுக்
கொள்கிறார். மகிழ்ச்சியாக இல்லாத சீனர்களையும் இந்தியர்களையும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும்
திரும்பிச் செல்லுமாறு அம்னோ எப்போது கூறி வருகின்றது. பக்காத்தானுக்கு வாக்களித்த
மலாய்க்காரர்கள் எங்கே போவார்கள் ?
உள்நாட்டு அமைச்சர்ன்னா கொக்கானான? வந்தவுடனே போட்டாரே நஜிப் அமைச்சரவைக்கு ஒரு ஆப்பு! நஜிப்க்கு நல்ல காலம் இல்லை போலிருக்கு?
ஜாவாவில் வீடு கட்டிக் கொடுக்கச் சொல்லுங்கள். போகின்றோம்!
இவரோ இந்தோனேசியா பரம்பரையை சேர்ந்தவர் என்பதை ஜாஹிட் அவரின் மூலமாகவே சொல்லவைத்துவிட்டார் இறைவன்.ஆகவே இவரும் இந்நாட்டில் குடியேறிதான். .இவர் இனி மற்றவர்களை குடியேறிகள் என்று சொல்ல அதிகாரமில்லை.
பங்களாதேஷிகள், இந்தோனேசியர்கள், மியன்மாரிகள் எங்களுக்கு துணையாய் இருக்கிறார்கள் என்ற அர்த்தத்தில், இந்தியர்களும் சீனர்களும் அவரவர் தாய் நாட்டுக்கு போகலாம் என்று பதவி ஏற்ற மறுநாளே பொறுப்புள்ள உள்துறை அமைச்சர் பேசியிருக்கிறான். இனி என்னென்ன அராஜகங்கள், பழிவாங்கும் படலங்கள் எல்லாம் அரங்கேறபோகுதோ.
இவன் கூடிய சீக்கிரத்தில் மக்களிடம் செருப்படி வாங்கிவுடுவான் என்று பெர்னாமா திட்டவட்டமாக கூறுகிறது.
பங்கள நாட்டிலும் இந்தோனிசைவிலும் நான் வேலை செய்தவன்.அவர்களின் கொள்கைகள் நம் நாட்டில் உள்ள பிஎன் பிக்கேரிகளுக்கு தெரியாது,என்றாவது ஒரு நாள் வளத்த கெட,மார்பில் பாயிவது நிட்ச்சியம் அப்பா தெரியும் அந்த முல்லா மாறி பிஎன் கூட்டட்துக்கு…
நண்பர்களே…அது முகத்தை பார்த்திங்கள,எதோ பல் விளக்கும் கம்பெனிக்கு போஸ் குடுக்குறமாதிரி இல்ல?இது எல்லாம் வந்திருசிங்க நாட்டை வலி நடத்தா…இன்னும் என்னத்த கிழிக்குமோ…
இவன் இன்னொரு சயீத் ஹமீது அல்பர் ……….Lawan Tetap Lawan…….
என்னுடைய முப்படன் வாழ்த்த நாடு கடாரம் {ராஜராஜசோழன் ] அப்பிடின என்னுடைய நாடு மலாயா, சாஹிட் நாடு சாவகம்
நீதியை கேட்டால்,மகிழ்ச்சி அடையாத மலேசியர்கள் வேற்று நாடுகளுக்கு குடியேறலாம்,சூப்பர் ஸாஹிட்,பிறகு என்ன ?ஒரு பங்கள நாட்டிற்கே,அடையாலாகர்டை கொடுத்துவிடுவீரோ?
வேண்டும் பாரிசானுக்கு, உன்னை போல் ஒரு அமைச்சர்,
இவர் தேர்தலில் தோற்று விட்டால் இந்தோனிசியாவுக்கு போய்விடுவாரா இந்த முட்டாள் அமைச்சர் ?
டேய் பொறம்போக்கு நீ எல்லாம் மக்களுக்கு என்ன கிழிக்க போறே!
இன வெறியை மாத்திரம் மண்டை நிறைய வைத்திருக்கும் நபர்கள் நிரம்பியது அம்னோ அமைச்சரவை. அரசியல் அரிச்சுவடி அறியாதவன்கூட இவ்வளவு கிழ்த்தரமாக சிந்திக்கவும் மாட்டான்; பேசவும் மாட்டான். அரசாங்கத்தைக் கைப்பற்றவேண்டும் எனும் நோக்கத்திற்காக மட்டுமே வெளியூர்காரர்களுக்கு பிரஜை அந்தஸ்த்தைக் கொடுத்து வாக்களிக்கச் செய்த அயோக்கியத்தனத்தை உலகில் எந்த அயோக்கியத்தனமான நாடும் செய்யாததை இவர்கள் செய்திருப்பதை சுட்டிக்காட்டினால் , நாம் வேறு நாட்டிற்குப் போகவேண்டும் என்று சொல்பவனின் அறிவை என்னவென்பது? இவர்களை இப்படியே விட்டுவிட்டால் மலாய்க்காரர்களின் நிலை மகாதீர் பயந்ததைப்போல் ஆகிவிடும் என்பதுமாத்திரம் நிச்சயம்.
பதவி வந்ததும், அமைச்சர் சொல்றத பாருங்க சார், தலை எழுத்து!