பிரதமர்
நஜிப் அப்துல் ரசாக் தம் அமைச்சரவையில் பி.வேதமூர்த்தியை ஒரு துணை அமைச்சராக நியமனம் செய்திருப்பதை இந்திய என்ஜிஓ-கள் அடங்கிய குழு ஒன்று வரவேற்றுள்ளது.
வேதமூர்த்தி துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்குப் பலர் கண்டனமும் தெரிவித்துள்ளனர். அவரின் சகோதரர் உதயகுமார் அதைக் கடுமையாகக் குறைகூறியதுடன் அவர் “புதிய சாமிவேலு” என்றும் அம்னோவுக்கு ஆமாம் போடும் ஆசாமி என்றும் வருணித்துள்ளார்.
ஆனால், கூலிமில் உள்ள பத்து கிரேஸ் ஆஸ்ரமத்தின் நிறுவனரும் ஆலோசகருமான சோலமன் பி.ஜி. இராஜேந்திரன் (வலம்), நஜிப் செய்ததுதான் சரி என்று கூறினார். அரசாங்கத்தில் இந்திய மலேசியர் பிரதிநிதித்துவம் கூடுதலாக இருப்பது நல்லதுதான் என்றும் அது அவசியமான ஒன்றுதான் என்றும் கூறினார். அதுவும், என்ஜிஓ பிரதிநிதி ஒருவர் அரசாங்கத்தில் உறுப்பு வகிப்பது இன்னும் நல்லது.
“ஒரு என்ஜிஓ-வால்தான் இன்னொரு என்ஜிஓ-வின் தேவையைப் புரிந்துகொள்ள முடியும். இந்த அமைப்புகளுக்கும் அவற்றின் சேவைகளுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நினைக்கிறோம்”, என நேற்றிரவு பினாங்கில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார். அவருடன் 10 என்ஜிஓ-களின் தலைவர்களும் இருந்தனர்.
அடுத்த மாதம் பினாங்கு, கெடா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களிலிருந்து 120 என்ஜிஓ-கள் வேதமூர்த்தியைச் சந்தித்து இந்திய சமூகத்தின் தேவைகளை எடுத்துரைக்க திட்டமிட்டுள்ளன.
அச்செய்தியாளர் கூட்டத்தில் பினாங்கு ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி எம்ஜிஆர் மன்றம், அன்பே ஆனந்தம், ஸ்ரீபரமஹம்ச தாசர் நலவளர்ச்சி சங்கம், யாகின் கல்லூரி, கெடா இந்தியர் சங்கம் முதலியவை கலந்து கொண்டன.
அவர்கள் “Hidup PM (வாழ்க பிரதமர்)” “1 மலேசியா” என்றும் முழக்கமிட்டனர். நஜிப்பின் உருவப்படம் கொண்ட பதாகைகளையும் ஏந்தி இருந்தனர்.


























இந்த கொசுக்கள் தொல்லை தங்க முடிய வில்லை….
இந்த கொசுக்கள் எல்லாம் சுயநலவாதிகள்…. அப்படித்தானே பேசுங்கள்….
மானங்கெட்ட வேதாவை விட ம இ கா எவ்ளவோ மேல் , NGO என்று குறிக்கொண்டு பிச்சை எடுத்தால், முதலில் பிச்சை பத்திரத்தை கையில் எடுங்கள் ……..
இந்த நாட்டில் 1000 தமிழ் பள்ளிகளை கட்டுங்கள் ( UMNO BN ) அபொழுது நீங்கள் எங்களை நாட தேவையில்லை , நாங்கள் உங்களை நடுவோம் . மேலும் NGO என்று கூறும் தலைவர்களை புறக்கணியுங்கள் , நேராக பள்ளிகளுக்கு பணம் சென்றடைய வழி செயுங்கள் , மக்கள் தானாக BN அதரவு தருவார்கள் .
யாராச்சும் உட்கார்ந்து போங்ககப்பா தலையே வலிக்குது.
சரியா! சரி இல்லையா! என்று பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அவருக்கு ஒரு பதவி கொடுக்கப் பட்டிருக்கிறது. அதனை அவர் செவ்வனே செய்ய வேண்டும். நாம் சும்மா அவருக்கு எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருந்தால் அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்கிக்கொண்டு அவர் வேலையை அவர் பார்த்துக் கொண்டிருப்பார்! அவரை விட்டு விடுங்கள். அவர் என்ன தான் செய்கிறார் என்று பார்ப்போமே! அவருக்கும் மனசாட்சி உண்டு. செய்யட்டுமே!
மானத்தை முழுதாக விற்றுவிடன் தமிழன் அவன் தேவைக்காக
கடுப்பு ஏத்துறான் மை லார்ட்
முதலில் வேதா வேலை செய்யட்டும், முடிவை பார்த்து …….
பாராட்டா….தலை ஆட்டா …?
உண்மையில் நாம் கொஞ்சம் யோசித்து பார்க்கும் போது வேதா அவர்களின் இந்த நியமனம் சரியானதே என்று தோன்றும் . இது வரை அரசியல் கட்சிகளை நம்பி இந்தியர்களின் பிரச்சனைகள் எதுவும் நிறைவடைய வில்லை . கட்சி அடிப்படையில் நம்மை பிரித்து வைத்து நமது தேவைகள் நிராகரிக்கப் பட்டது . இந்திய சமுதாயம் பலன் பெரும் வகையில் முதல் முறையாக பிரதமர் அரசியல் சார்ப்பற்ற ஒருவருக்கு இந்த பதவி வழங்கி இருப்பது என்பது வரவேற்க தக்கது . 56 ஆண்டுகள் பொறுத்த நாம் இந்த ஐந்து ஆண்டுகள் இவர் சேவை எப்படி என்பதை பொறுத்திருந்து பார்போம் .நமக்கு தேவை கட்சிகளின் ஒற்றுமை இல்லை .இந்திய சமுதாயத்தின் உயர்வான வாழ்க்கை தரம். இந்திய சமுதாயமே இந்த நேரத்தில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். …ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன, நமக்கு தேவை சமுதாய உயர்வுமட்டுமே . வேதா அவர்கள் சேவை செய்ய வழி விடுவோம் .
முதலில் வேதா வேர்கட்டும் , வேகட்டும் ……
பிறகு துதி பாடலாம், ஆடலாம் …!
அப்படி போடு சுப்ரா அண்ணாதே
இந்த நாடில் வறுமையில் வாழும் தமிழ் மக்களுக்கு அமைசர் வேத அவர் பணியை செய்வர் என்று நம்புவோம்
இவர் யன்னதன் செய்வர் என்று பர்போம்மே