‘505 கறுப்புப்’ பேரணி ஜூன் 22-க்குத் தள்ளிவைப்பு

11rallyபிகேஆர், ஜூன் 15-இல் நடத்தத் திட்டமிட்டிருந்த தேர்தல் மோசடிக்குக் கண்டனம் தெரிவிக்கும் பேரணியைத் தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது.

“ஜூன் 15-இல் வேறு சில தரப்புகள் அவர்களின் நிகழ்வுகளை நடத்த முன்கூட்டியே திட்டமிட்டிருப்பதைக் கருத்தில்கொண்டு இவ்வாறு செய்யப்படுகிறது.

“டாங் வாங்கி போலீசாருடன் பேச்சு நடத்தி பேரணியை அதற்கு அடுத்த வாரம் ஜூன் 22-இல் நடத்துவதென முடிவு செய்துள்ளோம். நண்பகல் 12 மணிக்குப் பேரணி தொடங்கும் ” என இன்று பெட்டாலிங் ஜெயாவில், செய்தியாளர் கூட்டமொன்றில் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி இதனைத் தெரிவித்தார்.

ஜூன் 15-இல், பாடாங் மெர்போக்கில் மறுசுழற்சி விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதற்கு அருகிலேயே ஒரு திருமணச் சடங்கும் நடக்கிறது என்றும்  அந்நிகழ்வுகளில் சம்பந்தப்பட்டவர்கள் கட்சியைத் தொடர்புகொண்டு ஒத்துழைப்பை வேண்டினார்கள் என்றும் ரபிஸி விளக்கினார்.

மே 5 பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறி அதற்குக் கண்டனம் தெரிவிக்க நாடு முழுக்க பிகேஆர் ஏற்பாடு செய்துவரும் 505 கறுப்புப் பேரணிகளின் வரிசையில் கோலாலும்பூர் பேரணியை வரும் சனிக்கிழமை நடத்த அது திட்டமிட்டிருந்தது.

 

TAGS: