‘505 கறுப்புப் பேரணி’க்கு முன்னதாக திடீர்கூட்டங்கள்

flashmobஜூன் 22  ‘505 கறுப்புப் பேரணி’ ஏற்பாட்டாளர்கள் பேரணிக்கு முன்னதாக அதற்கு விறுவிறுப்புச் சேர்ப்பதற்காக இரண்டு திடீர்கூட்டங்களை நடத்தத் திட்டமிடுவதாக சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) தலைவர் பட்ருல் ஹிஷாம் ஷாஹாரின் கூறினார்.

நாளை பிற்பகல் 2 மணிக்கு ஒரு திடீர்கூட்டம் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் சோகோ விற்பனை மையத்தைச் சுற்றிலும் கூடும். அதற்கடுத்த கூட்டம் ஜூன் 19-இல் ஜாலான் துன் பேராக்கில் மாலை மணி 6க்குக் கூடும்.

இத்திடீர்கூட்டங்களை அடுத்து கோலாலும்பூர், சிலாங்கூர் அசெம்ப்ளி மண்டபத்தில் ஜூன் 21-இல் பேரணிக்கு முந்திய-நாள் கூட்டம் நடைபெறும்.

“அதில்,பொதுத் தேர்தல் மோசடிகளுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்ளப்போகும்  ஜூன் 22 பேரணி பற்றி இறுதி விளக்கம் அளிக்கப்படும்”, என்று பட்ருல் இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

 

TAGS: