‘505கறுப்புப் பேரணி’க்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்: போலீஸ் எச்சரிக்கை

rafizi01‘முறையான அனுமதிகள்’ இன்றி ஜூன் 22-இல் ‘505கறுப்புப் பேரணி’ நடத்தப்பட்டால் போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பக்ரி ஸினின் எச்சரித்துள்ளார்.

செய்தியாளர் கூட்டமொன்றில் போலீஸ் படை துணைத் தலைவர் இவ்வாறு கூறியதாக த ஸ்டார் இணைய செய்தித் தளம் கூறுகிறது.

பேரணி ஏற்பாட்டாளரான பிகேஆரின் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி (வலம்) அனுமதி கிடைக்கிறதோ இல்லையோ  பாடாங் பெர்போக்கில் பேரணி நடப்பது உறுதி என்று அறிவித்துள்ளார்.

பாடாங் மெர்ப்போக்கை நிர்வகிக்கும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றமோ, அங்கு பேரணி நடத்த அனுமதி இல்லை, வேறு இடம் பாருங்கள் என்று கூறிவிட்டது.

TAGS: