‘IPCMC அல்லது EAIC எதுவாக இருந்தாலும் உறுதியான நடவடிக்கையே அவசியம்”

EAICபோலீஸ் தடுப்புக் காவல் மரணங்களாக இருந்தாலும் அமலாக்க நிறுவனங்களின்  அதிகார அத்துமீறல்களாக இருந்தாலும் ‘கடுமையான நடவடிக்கையே’ முக்கியம்,  அதனை எடுக்கும் அமைப்பு அல்ல என இளைஞர், விளையாட்டு அமைச்சர்  கைரி ஜமாலுதின்  கூறுகிறார்.

IPCMC என்ற போலீஸ் புகார்கள் தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம்  அல்லது EAIC என்ற நேர்மை ஆணைய அமலாக்க நிறுவனம் எதுவாக  இருந்தாலும் மக்கள் கடுமையான நடவடிக்கையை விரும்புகின்றனர்,” என்றார்  அவர்.

“அந்த வேலையை எந்த அமைப்பு செய்கின்றது என்பது முக்கியமல்ல.
வேலையைச் செய்து முடிப்பதே முக்கியமானது என கைரி சிலாங்கூர் சிப்பாங்கில்  நிருபர்களிடம் கூறினார்.

 

TAGS: