சனிக்கிழமை பேரணியில் தேவை என்றால் இராணுவம் போலீசுக்கு உதவும்

polisசனிக்கிழமை, கோலாலும்பூர் பாடாங் மெர்கோக்கில் மாற்றரசுக் கட்சியினர் நடத்தும் பேரணியை எதிர்கொள்ள போலீஸ் ஆயத்தமாக உள்ளது.

நாட்டில் பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநிறுத்துவது போலீசின் பொறுப்பு என்று உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறை இயக்குனர் சாலே மாட் ரசீட் கூறினார்.

“போலீசால் அமைதியைக் கட்டிக்காக்க முடியும். தேவையானால் இராணுவத்தின் உதவியையும் நாடுவோம்”, என்று அவர், இன்று ஈப்போவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பேரணியிலும் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் கலந்துகொள்ள வேண்டாம் என்று பொதுமக்களுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

 

TAGS: