அன்வார்: இனிமேல் ‘505 கறுப்பு தின’ பேரணி இல்லை

anwarதேர்தல் மோசடிக்கு எதிராக அண்மைய எதிர்காலத்தில் மேலும் ‘505 கறுப்பு தின’  பேரணியை நடத்தும் திட்டம் எதுவும் பக்காத்தான் ராக்யாட்டிடம் இல்லை.

இவ்வாறு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அரசு சாரா அமைப்புக்கள் அத்தகைய பேரணிகளை நடத்தக் கூடும் என அவர்  சொன்னார்.

“நான் அரசு சாரா அமைப்புக்களுக்காக பேச முடியாது. பக்காத்தான்
ராக்யாட்டைப் பொறுத்த வரையில் நாம் முன்னேற வேண்டும்,” என பக்காத்தான்  தலைமைத்துவ மாநாட்டுக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

“13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகளுக்கு எதிரான  போராட்டம் தொடரும். ஆனால் அது தேர்தல் மனுக்கள், மற்ற நாடுகளுடனான  தொடர்புகள் வழி செய்யப்படும்” என்றார் அவர்.

 

TAGS: