தாக்குதல் வழக்கு பற்றிக் குறிப்பிட்டதும் ஆத்திரமடைந்தார் அஹ்மட் ஜஹிட்

zahidமக்களவையில் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி-இடம் அவர்மீதுள்ள போலீஸ் புகார் குறித்து கோபிந்த் சிங் டியோ (டிஏபி-பூச்சோங்) கேட்கப்போக அவையில் அமளி சூழ்ந்தது.

அரச உரைமீதான விவாதத்தின்போது தம் அமைச்சு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அஹ்மட் ஜஹிட் விளக்கமளித்துக் கொண்டிருந்தபோது அவர்மீதுள்ள தாக்குதல் வழக்கு பற்றி கோபிந்த் வினவினார். அதனால் ஆத்திரமடைந்த ஜஹிட் கோபிந்தைத் திட்டினார். இருவருக்குமிடையில் வாக்குவாதம் மூண்டது.

ஜஹிட் மீது தொடுக்கப்பட்டுள்ள அந்த சிவில் வழக்கில் கோபிந்த் சிங்தான் வழக்குத் தொடுத்தவரின் வழக்குரைஞராவார்.

 

TAGS: