‘அடையாளக் கார்டுகளை மீண்டும் வழங்குவது சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களைத் தடுக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை’

sabah ic_1சபா மக்களுக்கு மீண்டும் அடையாளக் கார்டுகளை வழங்குவது, அங்கு நிலவும்  கள்ளக் குடியேற்றக்காரர் பிரச்னையைத் தீர்க்காது என முன்னாள் சபா  முதலமைச்சர் சொங் கா கியாட் இன்று கூறியுள்ளார்.

அவரது கருத்து சபா மக்களுக்கு அடையாளக் கார்டுகளை மீண்டும் வழங்க  வேண்டும் என பல முக்கிய கடாஸான் கட்சிகள் தெரிவித்துள்ள யோசனைக்கு  மாறாக அமைந்துள்ளது.

மீண்டும் வெளியிடப்படும் அடையாளக் கார்டுகளை குடியேற்றக்காரர்கள் பெற  மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என சபா  குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்திடம் சொங் கூறினார்.

“அந்தப் பிரச்னையை நேருக்கு நேர் சந்திப்பது தான் சிறந்த வழி என அவர்  சொன்னார். 2001லிருந்து 2003 வரை அவர் சபா முதலமைச்சராகப்  பணியாற்றியுள்ளார்.

 

TAGS: