ஏப்ரல் மாதத்திற்கான டீசல் பயனாளர்களுக்கான ரொக்க உதவித் தொகை ரிம 400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட பண உதவி விவசாயிகள், சிறு நில உரிமையாளர்கள் மற்றும் தகுதியுள்ள டீசல் வாகன உரிமையாளர்களுக்கு பயனளிக்கும்.

மேற்கு மலேசியாவில் டீசல் விலை மார்ச் 12-ஆம் தேதி ஒரு லிட்டருக்கு ரிம 3.12 ஆக இருந்த நிலையில், தற்போது அது ரிம 6.72 ஆக உயர்ந்துள்ளது.

நீடித்த உலகளாவிய விலை அழுத்தங்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு மாற்றமாக, இரண்டு புடி மதானி(Budi Madani) திட்டங்களின் கீழ் டீசல் பயனாளர்களுக்கான பண உதவித்தொகையை ஏப்ரல் மாதத்திற்கு ரிம 300-லிருந்து ரிம 400 ஆக உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

கூடுதலாக வழங்கப்படவுள்ள 100 ரிங்கிட், ஏப்ரல் 21 அன்று வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அதிகரிப்பால் விவசாயிகள், சிறு நில உரிமையாளர்கள் மற்றும் தகுதியுள்ள தனிநபர் டீசல் வாகன உரிமையாளர்கள் பயனடைவார்கள். தீபகற்ப மலேசியாவில், புடி அக்ரி-கொமோடிடி(Budi Agri-Komoditi) திட்டம் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளையும், புடி டீசல் இண்டிவிடு திட்டம் சுமார் 1,50,000 பயனாளர்களையும் சென்றடையும்.

வாகனங்கள் அல்லாத பிற பயன்பாடுகளுக்கான டீசல் கொள்முதல் விதிகளைத் தளர்த்தப்போவதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, செல்லுபடியாகும் பதிவு ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில், விவசாய இயந்திரங்களின் உரிமையாளர்கள் சிறப்பு அனுமதி இல்லாமல் 20 லிட்டருக்கும் அதிகமான டீசலை வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.

“மூன்று டீசல் மானியத் திட்டங்களுக்கான கூடுதல் ரிம 75 மில்லியன் உட்பட, ஏப்ரல் 2026-ஆம் ஆண்டுக்கான சுமார் ரிம 7 பில்லியன் மானியங்களை நிதி அமைச்சகம் ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அது தெரிவித்தது.

மத்திய கிழக்கு மோதல் தொடர்பான உலகளாவிய விநியோகத் தடைகளைத் தொடர்ந்து டீசல் விலை கடுமையாக உயர்ந்த பிறகு, இந்த இரண்டு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் பண உதவியில் இது இரண்டாவது அதிகரிப்பாகும்.

அதே திட்டங்களின் கீழ், ஏப்ரல் மாதத்திற்கான உதவித்தொகை அளவை, முன்னர் வழங்கப்பட்ட ரிம 200-லிருந்து ரிம 300 ஆக அரசாங்கம் முன்னதாகத் தக்கவைத்துக் கொண்டிருந்தது.

தொடரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், முக்கிய கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இது மலேசியா உட்பட அனைத்து சந்தைகளிலும் எரிபொருள் செலவுகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

மார்ச் 12 முதல், மேற்கு மலேசியாவில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரிம 3.12-லிருந்து ரிம 6.72 ஆக உயர்ந்துள்ளது. சபா, சரவாக் மற்றும் லபுவானில் டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரிம 2.15 என்ற மானிய விலையில் தொடர்கிறது.

தனித்தனியாக, 2026 ஆம் ஆண்டு நடவுப் பருவத்திற்கான நெல் சாகுபடி ஊக்கத்தொகை ஒரு ஹெக்டேருக்கு ரிம 160 இலிருந்து ரிம 300 ஆக உயர்த்தப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இந்த அதிகரிப்பானது சுமார் ரிம 40 மில்லியன் கூடுதல் நிதியை உள்ளடக்கியதுடன், கிட்டத்தட்ட 200,000 நெல் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் சிலர் இந்த மாதம் நடவுப் பணிகளைத் தொடங்க உள்ளனர்,” என்றும் அது மேலும் கூறியது.