ஷாஹிடான்: கோலாலம்பூரில் கோழி விலை கிலோவுக்கு ரிம 8 ஆகக்…

கோலாலம்பூரில் ஒரு கிலோவுக்கு ரிம8.90 ஆக இருந்த நிலையான கோழி விரைவில் ஒரு கிலோவுக்கு ரிம8 என்ற விலையில் விற்கப்படும் என்று மத்திய பிரதேச அமைச்சர் ஷாஹிடான் காசிம் தெரிவித்தார். கோலாலம்பூர் சிட்டி ஹாலுக்கு  (DBKL) சொந்தமான வணிக வளாகத்தின் வாடகையை அமைச்சகம் குறைத்த பிறகு புதிய விலை…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த ஒரேவழிமுறை – சரவணன்

மனித வளத்துறை அமைச்சர் எம்.சரவணன் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கண்காணிப்பு வழிமுறைகளை அறிமுகம் செய்கிறார், ஒப்புதல் கட்டத்தில் தொடங்கி, அனைத்து விண்ணப்பங்களும் செப்டம்பர் 1 முதல் தொழிலாளர் துறையின் மிக உயர்ந்த அலுவலகத்தில் "ஒற்றை சாளரம்" வழியாகச் செல்ல வேண்டும். சரவணன் (மேலே) அந்த வழிமுறை  தற்போது அஸ்ரி…

நஜிப் பின்னடைவுகளை எதிர்கொள்ளும்போது, அவரது ஆதரவாளர்கள் தலைமை நீதிபதியின் குடும்பத்தைக்…

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உச்ச நீதிமன்றத்தில் தனது மேல்முறையீட்டு விசாரணையைத் தாமதப்படுத்த முடியாத நிலையில், அவரது ஆதரவாளர்கள் பலர் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் டுவான் மாட்டின்(Tengku Maimun Tuan Mat) கணவர் ஜமானி இப்ராஹிமை(Zamani Ibrahim) சமூக ஊடகங்களில் தாக்கினர். மே 11, 2018…

GE15 : பெர்சத்து மற்றும் PAS உடன் எந்த ஒப்பந்தங்களும்…

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் PAS மற்றும் பெர்சத்துவுடன் ஒத்துழைக்க அம்னோவால் இயலாது   என்று கட்சியின் பொதுச் செயலாளர் அஹ்மத் மஸ்லான்(Ahmad Maslan) கூறினார். "அனைத்து தரப்பினரும் 2021 ஆம் ஆண்டு அம்னோ வருடாந்திர பொது கூட்டத்தில்  ஒப்புக் கொள்ளப்பட்ட தீர்மானத்தைப் பார்க்க வேண்டும்," என்று அவர் கூறினார். 15வது…

அரசை பாதுகாக்குமாறு அரசு ஊழியர்களை கேட்பது நகைச்சுவையானது – ஹராப்பான்

குற்றச்சாட்டுக்கள் மற்றும் அவதூறுகளிலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்குமாறு அரசாங்க ஊழியர்களை வலியுறுத்தியதற்காகப் பிரதம மந்திரி இஸ்மாயில் சப்ரி யாகோப்பை பக்காத்தான் ஹராப்பான் இளைஞர்கள் விமர்சித்தனர். இன்று ஒரு அறிக்கையில், இது அரசாங்கத் தலைவரிடமிருந்து வரும் ஒரு "இயற்கைக்கு மாறான" நடத்தை, எனவே, அரசு ஊழியர்களால் நிராகரிக்கப்பட வேண்டும் என்று ஹராப்பான்…

அம்னோ தலைவர்கள் நீதித்துறையைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள்

முன்னாள் அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் எதிர்கொண்ட சட்டரீதியான பின்னடைவுகளைத் தொடர்ந்து, நீதித்துறையின் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தொடுத்ததாக அம்னோ உயர் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பெஜுவாங் சட்ட ஆலோசகர் முகமது ரபீக் ரஷீத் அலி, செவ்வாயன்று "புதிய ஆதாரங்களை" அறிமுகப்படுத்துவதற்கான நஜிப்பின் முயற்சியை உச்ச…

தூருன் போராட்டம் – அமானா இளைஞர் தலைவர் உட்பட 3…

ஜூலை 23 அன்றுஅதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிரான  பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மூன்று தனிநபர்கள்  குற்றம் சாட்டப்பட்டனர். அமானா இளைஞர் தலைவர் Hasbie Muda, பத்து பி.கே.ஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் Muhammad Sabda Suluh Lestari மற்றும் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக மலேசியா…

பிரதமருடனான அதிகாரப்பூர்வ சந்திப்புக்கான கோரிக்கையை PN  சமர்ப்பித்தது

கூட்டணி கட்சி எழுப்பிய பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பை அதிகார பூர்வமாக சந்திக்க  பெரிகத்தான் நேசனல் (PN) ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளது இந்த விஷயத்தை அதன் பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுடின் (மேலே) இன்று உறுதிப்படுத்தினார், அவர் பிரதம மந்திரியுடனான தனது முந்தைய…

நஜிப்பின் புதிய ஆதாரங்கள் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அம்னோவுக்கு…

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தண்டனைக்கு எதிரான இறுதி மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியை உச்ச நீதி மன்றம் நிராகரித்ததை  அம்னோவின் முக்கிய இரு தலைவர்கள் விமர்சித்துள்ளனர். நேற்றிரவு அம்னோ தலைவர் அமாட் ஜாஹிட் ஹமிடி ஒரு அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் அவரது கட்சி…

அமைச்சர்: வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு அரசாங்கம் குடியுரிமை வழங்க முடியாது

பிரதமர் துறையின் அமைச்சர் வான் ஜுனைடி துவான்கு ஜாஃபர்( Wan Junaidi Tuanku Jaafar), வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு மலேசிய தாய்மார்கள் மூலம் குடியுரிமை வழங்குவதற்கான கூட்டாட்சி அரசியலமைப்பை திருத்துவது அரசாங்கத்தின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது என்று கூறினார். அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆட்சியாளர்கள் மாநாட்டின் தலையீடு தேவைப்படும் என்று அவர்…

பங்கூர் தீவில் ஜெல்லிமீன் கொட்டியதால் 5 வயது பிரெஞ்சு சிறுவன்…

பங்கூர் தீவில் உள்ள தெலுக் நிபா(Teluk Nipah) கடற்கரையில் திங்களன்று நீந்தும்போது ஜெல்லி மீன்களால் கொட்டப்பட்ட ஐந்து வயது பிரெஞ்சு சிறுவன் இறந்தான். மாலை 6.45 மணியளவில் நடந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் தனது குடும்பத்தினருடன் அங்கு நீராடும்போது திடீரென வலியால் அலறி துடித்ததாக மஞ்சுங்(Manjung) மாவட்ட காவல்துறைத் தலைவர்…

கரையோர போர்க்கப்பல் மோசடியில் அமாட் ஜாஹிட் சிக்கினார்

கரையோர போர்க்கப்பல் (எல்சிஎஸ்) திட்டம் குறித்த விசாரணை  அறிக்கை, அம்னோ தலைவர் அமாட் ஜாஹிட் ஹமிடி அந்த கப்பல் வாங்குவதில் தான் ஈடுபட வில்லை என்ற வாதத்தை கிழித்தெறிந்துள்ளது. அரசாங்க கொள்முதல் அறிக்கை மற்றும் நிதி தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் (JKSTUPKK) அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள சான்றுகள்  ஜாஹிட்டின்…

நெகிரி செம்பிலான் அக்டோபரில் தாவல் எதிர்ப்பு மசோதாவை தாக்கல் செய்ய…

நெகிரி செம்பிலான் அரசாங்கம், அக்டோபரில் தனது மாநில சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதைத் தடுப்பதற்கான திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. மந்திரி பெசார் அமினுதீன் ஹருன் கூறுகையில், இந்த சிறப்பு அமர்வு மற்றொரு திருத்த மசோதாவை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,…

பல அரசு ஒப்பந்ததாரர்கள் குறைந்தபட்ச ஊதியம் வழங்கவில்லை – குழுக்கள்

புதிய RM1,500 குறைந்தபட்ச ஊதியத் தீர்ப்பை மீறும் முதலாளிகள், குறிப்பாக அரசாங்க ஒப்பந்தங்களைப் பெற்ற  முதலாளிகள்  மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க ஒப்பந்தத் தொழிலாளர்களின் வலையமைப்பு (JPKK) மற்றும் பார்ட்டி சோசியலிஸ் மலேசியா (PSM) ஆகியவை இன்று மனிதவள அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளன. JPKK ஒருங்கிணைப்பாளரான சிவரஞ்சனி மாணிக்கம் மலேசியாகினியிடம்,…

TNB ஆண்டுதோறும் RM20b முதலீடு செய்ய, எரிசக்தி மாற்ற திட்டத்தை…

Tenaga Nasional Bhd (TNB) அடுத்த 28 ஆண்டுகளில் அதன் எரிசக்தி மாற்ற திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான முன்முயற்சிகளுக்கான மூலதன செலவினமாக ஆண்டுக்கு சுமார் ரிம20 பில்லியனை முதலீடு செய்யும். இந்த திட்டத்தின் மூலம், TNB அதன் உமிழ்வு தீவிரத்தை 2050 க்குள் நிகர பூஜ்ஜியமாக குறைக்க விரும்புகிறது. அதன்…

சாத்தியமான மறைமுக தரவு மீறல்கள் குறித்து, Kiplepay பயனர்களை எச்சரிக்கிறது

இ-வாலட் சேவை வழங்குநர்  Kiplepay Sdn Bhd அதன்  Kiple Visa Prepaid Card பயனர்களுக்கு திங்களன்று சமீபத்திய மூன்றாம் தரப்பு கட்டண நுழைவாயில் தரவு மீறல் மூலம், ஆபத்து குறித்து மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தது. Kiplepay என்பது Green Packet Bhd இன் முழு சொந்தமான…

சுகாதார ஆணையம் அமைக்க வேண்டும் – நிபுணர்கள்

தேவையான நிதியை அணுகுவதற்கும்,  சுகாதாரப் பயிற்சியாளர்களின் முறைகேடுகள் மற்றும் ஊதியத்தை மிகவும் திறம்பட கையாள்வதற்கும் ஒரு சுகாதார ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்று ஒரு சுகாதார நிபுணர் கூறினார். சுகாதார அமைச்சின் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல் (மருத்துவம்) டாக்டர் அஸ்மான் அபு பக்கர்( Dr Azman Abu…

மாரா டிஜிட்டல் திட்டத்தைத் தொடருங்கள், மாராவிடம் பிரதமர் கூறினார்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் Majlis Amanah Rakyat (Mara)க்கு மாரா டிஜிட்டல் திட்டத்தைத் தொடருமாறு அறிவுறுத்தியுள்ளார். சிலாங்கூரின் ஷா ஆலமில் இதுவரை பல மாரா டிஜிட்டல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். குவாந்தான், பஹாங், மற்றும் ஈப்போ, பேராக், அடையாளம் காணப்பட்ட மற்ற இடங்கள் லார்கின்,…

பங்கூரில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான நெத்திலிகளின் நிகழ்வை மீன்வளம் கண்காணிக்கிறது

பேராக் மாநில மீன்வளத் துறை, பங்கூர் தீவில் உள்ள பாசிர் போகக் கடற்கரையில் (Pasir Bogak beach) நெத்திலி மீன்கள் கரைக்கு வந்து அவ்வப்போது  கரை ஒதுங்குவதை கண்காணிக்கும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அதன் இயக்குனர் நோரைஷா ஹாஷிம் நேற்று முன்…

நஜிப்பின் கூடுதல் ஆதாரங்கள் முயற்சியை உச்ச நீதிமன்றம் தூக்கி எறிந்தது

முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதியான நஸ்லான் அவர்களின் தீர்ப்பு சந்தேகத்திற்குறியது காரணம் அவர், இதற்கு முன்பு இந்த வழக்கு சம்பந்தப்ப்ட்ட மலாயன் வங்கியில் வேலை செய்துள்ளார் என்ற வாதத்தை உச்ச நீதி  மன்றம் தள்ளுபடி செய்தது. நஸ்லானின் தீர்ப்பில் எந்த நடைமுறை குறையையும் காணவில்லை என்றது. எனவே,…

துங்கு அப்துல் ரஹ்மானின் மூத்த மகள் காலமானார்

முதல் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்-ஹாஜின்(Tunku Abdul Rahman Putra Al-Haj) மூத்த மகள் துங்கு கதீஜா(Tunku Khadijah), நுரையீரல் புற்றுநோயால் நேற்று கோலாலம்பூரில் உள்ள பந்தாய் (Pantai Hospital) மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 89. துங்கு கதீஜாவின் மகள் ஷரிபா மென்யலாரா ஹுசைன்(Sharifah…

போர்க்கப்பல் ஊழல் – முன்னாள் கடற்படை தலைவர் குற்றம் சாட்டப்பட்டார்

இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், கப்பல் கட்டும் Boustead Naval Shipyard (BNS) இன் முன்னாள் உயர் அதிகாரி அமாட்  ரம்லி முகமட் நோர்(Ahmad Ramli Mohd Nor) மீது  குற்றவியல் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ராயல் மலேசியன் கடற்படைக்காக ஆறு கடல் போர் கப்பல்களை (LCS)…

கோவிட்-19 (ஆகஸ்ட் 15): 2,437 புதிய  நேர்வுகள், 3 மாதங்களில்…

கோவிட்-19 |சுகாதார அமைச்சகம் நேற்று 2,437 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, அதே நேரத்தில் தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 42,203 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 4.6%…