சிறைக்காவலர்கள் புடைசூழ உதயகுமார் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்

uthayaதேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் கட்சியின் தலைவர் பி. உதயகுமார் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டார். அவரைச் சுற்றி ஆறு சிறை காவலர்கள் இருந்தனர்.

மற்ற கைதிகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் போது ஒரு கைதிக்கு ஒரு காவலர்தான் உடன்வருவார். உதயகுமாரை சுற்றி அறுவர் இருந்தனர்.

சிறைச்சாலை அதிகாரிகளின் இச்செயல் உதயகுமாரின் ஆதரவாளர்களுக்கு சினத்தை மூட்டியது. நீதிமன்ற அறையில் குழுமியிருந்த அவர்கள் உதயகுமார் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

உதயகுமார் சம்பந்தப்பட்ட வழக்கு அக்டோபர் 24 இல் மீண்டும் வழக்கு நிர்வகிப்பிற்கு வரும் என்று அவரது வழக்குரைஞர் எ.எஸ். டாலிவால் கூறினார்.