தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய Black Widow

russia_blast_001ரஷ்யாவில் பயணிகள் பேருந்தில் இஸ்லாமிய பெண் தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் வோல்கோகிராடில் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

அப்போது அப்பேருந்தில் பயணம் செய்த நைடா ஆசியலோவா(வயது 30) என்ற இஸ்லாமிய தீவிரவாத பெண் தான் வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இதில் அந்த பெண் உள்பட பேருந்தில் இருந்த 7 பேர் பலியாகினர், மேலும் 28 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பேருந்துக்கு பின்னால் வந்த காரில் இருந்த டாஷ்போர்டு கமெராவில் பதிவாகி உள்ளது.

தாக்குதல் நடத்திய நைடா தெற்கு ரஷ்யாவில் உள்ள வடக்கு காகசஸ் பகுதியைச் சேர்ந்தவர்.

இவர் 21 வயது டிமிட்ரி சோகோலோவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவருக்கு தீராத நோய் இருந்தததாக கூறப்படுகிறது, ரஷ்யாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளை பிளாக் விடோஸ் என்று தான் அழைப்பார்கள்.