சர்வதேசத்தின் அழுத்தமே ஜனாதிபதியின் அழைப்பு! அரசாங்கத்தை நம்பத் தயாரில்லை!- செல்வம் எம்.பி.

selvam_mp_mannarசர்­வ­தேச அழுத்­தங்­களின் கார­ண­மா­கவே ஜனா­தி­பதி கூட்­ட­மைப்­பிற்கு அழைப்பு விடுத்­துள்ளார். அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளினால் வெளிப்­படைத் தன்­மை­யில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்தார்.

தமிழ் மக்­களின் பிரச்சி­னை­க­ளைத்­ தீர்த்து வட­மா­காண சபைக்கு அதி­கா­ரங்­களை வழங்­கும் ­வரை அர­சாங்­கத்தை நம்பத் தயா­ரில்லை எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

இது­வரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கருத்­துக்­க­ளையோ வட மாகாண பிரச்­சி­னைகள் தொடர்­பிலோ எவ்­வித அக்­க­றையும் காட்­டாத அர­சாங்கம் இப்­போது தமிழ்த் தேசி­யக கூட்­டமைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுடன் பேசத் தயா­ரா­கி­யுள்­ள­தென்றால் அதற்கு சர்­வ­தேச அழுத்­தங்­களே கார­ண­மாகும்.

இலங்­கையில் தமி­ழர்­க­ளுக்கு நடை­பெற்ற இப்­போதும் இடம்­பெற்று வரும் அநீ­திகள் தொடர்பில் இன்று சர்­வ­தேச நாடுகள் அறிந்து கொண்­டுள்­ளன.

நாம் அர­சாங்­கத்­திடம் தனி நாட்டுக் கோரிக்­கை­யையோ, தனிப்­பட்ட விசேட உரி­மை­க­ளையோ கோர­வில்லை. எமது மக்­க­ளுக்­கான உரி­மை­க­ளையும், வட மாகா­ணத்­திற்­கான சுதந்­தி­ரத்­தை­யுமே கோரி நிற்­கின்றோம்.

எனினும் இவ்­வ­ளவு காலமும் விளங்கிக் கொள்­ளாத எமக்கு நிவா­ரணம் வழங்­காத அர­சாங்கம் இப்­போது பேச்­சு­வார்த்­தைக்கு அழைப்­பதன் நோக்கம் என்ன? சர்­வ­தே­சத்தின் அழுத்­தமே இதற்குக் காரணம்.

ஜனா­தி­ப­தியின் பேச்­சிலோ, அர­சாங்­கத்தின் செயற்­பாட்­டிலோ எந்­த­வொரு வெளிப்­ப­டை­யான தன்­மை­யு­மில்லை. ஜனா­தி­ப­தியின் பேச்­சினை நம்பி தமிழ் மக்­களே மேலும் காயப்­ப­டுத்த நாம் தயா­ரா­க­வு­மில்லை.

மேலும், வட மாகாண சபை­யினை ஆரம்­பித்து நான்கு மாத கால­மா­கின்­றது. எனினும், இன்று வரையில் வட மாகாண சபை தொடர்­பி­லான பிரச்­சி­னை­களை ஜனா­தி­பதி தீர்க்­க­வில்லை.

வட மாகாண தமிழ் மக்­களின் வாழ்க்கை இன்றும் இரா­ணுவ அதி­கா­ரத்தின் கீழேயே காணப்­ப­டு­கி்­ன­றது. அனைத்து மக்­க­ளாலும் ஏக­ம­ன­தாகத் தெரிவு செய்­யப்­பட்ட முத­ல­மைச்­சரை விடவும் எவரும் ஆத­ரிக்­காத ஆளு­ந­ருக்கே அதிக அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளது.

வட மாகா­ணத்தில் கோவில்கள், பாட­சா­லைகள் மற்றும் வீடுகள் உடைக்­கப்­ப­டு­கின்­றன. தமிழ் ம்ககளின் காணி­களை இரா­ணு­வத்­தினர் அப­க­ரித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

இவை எதையும் இன்­று­வ­ரையில் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச கவ­னத்திற் கொள்­ள­வில்லை.வட மாகாண சபை இப்­போது கேள்­விக்­கு­றி­யா­ன­தொரு நிலையில் உள்­ளது.

ஜனா­தி­பதி எம்­முடன் பேச்­சு­வார்த்­தைக்கு தயா­ராக முன்னர் வட மாகா­ணத்தின் பிர­தான பிரச்­சி­னை­களைத் தீர்க்க வேண்டும். வெகு விரைவில் ஆளு­ந­ரையும், இரா­ணு­வத்­தையும் வெளி­யேற்றி வடக்கில் சிவில் ஆட்­சி­யினை அமைக்க வேண்டும்.

வடக்கு மாகாண தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்கி, சுதந்திரமானதொரு வாழ்க்கையினை ஏற்படுத்தி வட மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்கும் வரையில் நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினை நம்பப் போவதில்லை. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையிலும் எவ்வித நம்பிக்கையுமில்லை என்றார்.

TAGS: