அரசியல் தீர்வு காண்பதற்கு ஆளும் தரப்பும் கூட்டமைப்பும் நெகிழ்வுடன் செயற்பட வேண்டும்! அமைச்சர் ராஜித

tna_govtசர்­வ­தேச அழுத்­தங்­க­ளி­லி­ருந்து மீள விரைவில் தேசியப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­பது மிகவும் அவசியம். அரசியல் தீர்வைக் காண்பதற்கு ஆளும்தரப்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் நெகிழ்­வுத்­ தன்­மை­யுடன் செயற்­ப­ட­வேண்­டி­யது மிக அவ­சி­ய­மாகும் என்று மீன்­பிடி மற்றும் நீரி­யல்­வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

உலகில் கடந்த காலங்­களில் சமா­தானம் அடை­யப்­பெற்ற நாடு­களில் அனைத்துத் தரப்­பி­னரும் இவ்­வாறு நெகிழ்­வுத்­ தன்­மை­யு­டனும் விட்­டுக்­கொ­டுப்­பு­ட­னு­மேயே செயற்­பட்­டுள்­ளனர். அதற்கு சிறந்த உதா­ர­ண­மாக தென்­னா­பி­ரிக்­காவை குறிப்­பிட முடியும் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

தேசியப் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு செயற்­பா­டுகள் மற்றும் அர­சாங்கம் மற்றும் கூட்­ட­மைப்பு ஆகி­ய­வற்றின் நகர்­வுகள் தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் கூறி­ய­தா­வது;

தேசிய பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­பதன் மூலமே நாட்டின் சிறப்­பான எதிர்­கா­லத்தை உறு­தி­ப­டுத்த முடியும். மற்றும் அர­சியல் ஸ்திர­மிக்க நாடாக இலங்­கையை உரு­வாக்க முடியும்.

எனவே விரை­வாக நாட்டின் தேசியப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வைக்­காண்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அந்­த­வ­கையில் அர­சியல் தீர்வை எட்­டு­வ­தற்­கான சிறந்த இட­மாக பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவே காணப்­ப­டு­கின்­றது.

எனவே பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வரு­வதன் மூலம் அனைத்துக் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து இந்தப் பிரச்­சி­னைக்கு ஒரு தீர்வைக் காணலாம்.

ஆனால் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வுக்கு வர­மாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கூறி­வ­ரு­கின்­றது. நம்­ப­கத்­தன்மை தொடர்­பான விவ­கா­ரமே இதற்கு கார­ண­மாக கூறப்­ப­டு­கின்­றது.

கூட்­ட­மைப்­புக்கு சந்­தே­கங்கள் இருக்­கலாம். எனவே கூட்­ட­மைப்பு நம்­பிக்கை கொள்ளும் வகையில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் அமை­ய ­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அதே­நேரம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் நெகிழ்­வுத் ­தன்­மை­யுடன் தேசிய பிரச்­சினை தீர்வு விவ­கா­ரத்தில் செயற்­ப­ட­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எனவே அர­சாங்கம் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­ப வேண்டும்.

காரணம் ஒரு பிரச்­சி­னைக்கு தீர்வை நோக்கி செல்­லும்­போது அங்கு விட்­டுக்­ கொ­டுப்­புக்கள் என்­பது தேவை­யாகும். எனவே தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு செயற்­பாட்டு விட­யத்தில் அர­சாங்­கமும் கூட்­ட­மைப்பும் தமது பொறுப்­புக்­களை நிறை­வேற்­ற ­வேண்டும்.

அதா­வது கூட்­ட­மைப்­புக்கு நம்­பிக்கை ஏற்­படும் வகையில் அர­சாங்கம் செயற்­ப­ட­ வேண்டும் என்­ப­துடன் கூட்­ட­மைப்பும் நெகிழ்­வுத்­ தன்­மை­யுடன் செயற்­ப­ட­வேண்டும்.

உலகில் பல நாடு­களில் சமா­தானம் அடையப் பெற்­றுள்­ளது. அவ்­வாறு அடை­யப்­ பெற்ற சமா­தா­ன­மா­னது விட்­டுக்­ கொ­டுப்­புக்கள் மற்றும் நெகிழ்­வுப்­ போக்­கு­களின் மத்­தி­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளது.

இது 50 வருட கால பிரச்­சி­னை­யாகும். எனவே இதில் கடி­னங்கள் இருக்­கத்தான் செய்யும். ஆனால் அவற்றை நாங்கள் வெற்­றிக்­கொண்டு பய­ணிக்­க ­வேண்­டி­யது அவ­சியம்.

விரைவில் அர­சியல் தீர்வை காணும் பட்­சத்­தி­லேயே சர்­வ­தேச அழுத்­தங்­க­ளி­லி­ருந்து மீள முடியும். அவ்­வாறு அடை­யப்­ பெறும் தீர்­வுத்­ திட்­ட­மா­னது அனைத்து மக்­க­ளையும் கௌர­வப்­ப­டுத்­து­வ­தாக அமை­ய­வேண்டும்.

எனவே அர­சியல் தீர்வை நோக்கி பய­ணிக்கும் பய­ணத்தில் அனை­வரும் தமது பொறுப்­புக்­களை உரிய முறையில் நிறை­வேற்­ற­ வேண்­டி­யது அவசியமாகும் என்றார்.

TAGS: