கொத்தணி, இரசாயக் குண்டுகளை விடுதலைப் புலிகளே பயன்படுத்தினர்! இராணுவம் வீசவில்லை – ஆயரின் குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா

Brigadier-ruwan-wanigasooyaகொத்தணிக் குண்டுகளையோ, இரசாயனக் குண்டுகளையோ தாம் போரில் பயன்படுத்தவில்லை என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்பிடம் நேற்று மன்னார் ஆயர், இதுபற்றிக் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய,
“இந்த வகையான குண்டுகளை நாம் ஒருபோதும் பயன்படுத்தியதில்லை.

கொத்தணிக் குண்டுகள் குண்டுகள் மற்றும் இரசாயன குண்டுகளை பயன்படுத்துவதற்கான ஆயுதங்கள் எங்களிடம் இல்லை.

விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினோம்.

அதுவும், அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட குண்டுகளைக் கொண்டு, விடுதலைப் புலிகளின் சரியான இலக்குகளின் மீதே தாக்குதல்களை நடத்தினோம்.

இரசாயன குண்டுகளை விடுதலைப் புலிகளே பயன்படுத்தினர்” என்று கூறியுள்ளார்.

TAGS: