பள்ளிவாசல் தாக்கப்படும் ‘சாத்தியம்’ இருப்பதை எதிர்த்து மலாய் என்ஜிஓ-கள் ஆர்ப்பாட்டம்

ngoநேற்றிரவு  பினாங்கு பாயான்  பாரு பள்ளிவாசலில் திரண்ட மலாய்  என்ஜிஓ-களைச்  சேர்ந்த சுமார்  150 பேர்,  சில  தரப்பினர்  பள்ளிவாசலைத்  தாக்கத்  திட்டமிடுவதாகக்  கூறி  ஆர்ப்பாட்டம்  செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை   தேவாலயங்களுக்கு  வெளியில் கண்டெடுக்கப்பட்ட  பதாதைகளில்  ‘அல்லாஹ்’ என்னும்  சொல்  இருந்ததையும்  அவர்கள் கண்டித்தனர். 

அல்லாஹ்  என்னும்  சொல்  முஸ்லிம்களுக்கு  மட்டுமே  உரியது  என்றுரைக்கும்  பதாதைகளை  வைத்திருந்த  அவர்கள்  பின்னர்   பாயான்   பாரு  போலீஸ்  நிலையத்தில்  புகார்  செய்ய  புறப்பட்டுச்  சென்றனர்.