வடமாகாணசபையின் பிரேரணையை அரசாங்கம் ஏற்காவிடினும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளும்! விக்னேஸ்வரன்

vicneshwaran7வட மாகாண சபையின் பிரே­ரணை தொட ர்பில் அர­சாங்கம் கவ­னத்திற் கொள்­ளா­விட்­டாலும் சர்­வ­தேசம் கவ­னத்தில் கொள்ளும். சர்­வ­தேச விசா­ர­ணை­களே தமிழ் மக்­களின் இறுதி நம்­பிக்கையாகும் இதனைத் தொடர்ந்தும் சர்­வ­தே­சத்­திடம் வலி­யு­றுத்­துவோம் என்று வட மாகாண முத­ல­மைச்சர் சீ.வி.விக்­னேஸ்வரன் தெரி­வித்தார்.

அர­சாங்கம் அன்று செய்­ததன் விளை­வு­க­ளையே இன்று சர்­வ­தேச அழுத்­தங்­களின் மூலம் அனு­ப­விக்­கின்­றது. இறுதி யுத்­தத்தில் நடந்த உண்­மை­களை அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களே வெளிப்­ப­டுத்­து­கின்­றது எனவும் அவர் கூறினார்.

வட மாகாண சபையின் பிரே­ரணை தொடர்பில் அர­சாங்­கத்தின் அலட்­சி­யப்­போக்கு தொடர்பில் வினா எழுப்­பி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்துத் தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

கடந்த திங்­கட்­கி­ழமை வட மாகாண சபையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை தொடர்பில் அர­சாங்கம் அலட்­டிக்­கொள்­ள­வில்லை என்று குறிப்­பி­டு­வ­தா­னது இறு­திக்­கட்ட யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்பில் அர­சாங்கம் அக்­கறை கொள்­ள­வில்லை என்றே அர்த்­த­மாகும். அர­சாங்கம் தமது நிலைப்­பாட்டில் இருந்து செயற்­ப­டு­கின்­ற­னரே தவிர வடக்கின் மக்கள் தொடர்பில் அக்­கறை கொள்­ள­வில்லை.

அர­சாங்கம் இந்த நான்கு ஆண்­டு­களில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் கவனம் செலுத்­தி­யி­ருக்­கு­மாயின் இன்று நாம் சர்­வ­தேச விசா­ர­ணை­களை கேட்­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. நாம் ஆரம்­பத்தில் இருந்தே அர­சாங்­கத்­தி­டமே நியாயம் கோரினோம். எனினும், அர­சாங்கம் இன்­று­வ­ரையில் எமக்­கான நியா­யத்­தினை பெற்­றுத்­த­ராமல் இரா­ணுவ கட்­டுப்­பாட்டின் கீழேயே வட மாகா­ணத்தை வைத்­துள்­ளது.

தமிழ் மக்­களின் இறுதி நம்­பிக்­கை­யாக இருப்­பதே சர்­வ­தேச விசா­ர­ணைகள் மட்­டுமேயாகும். அர­சாங்­கத்­தினால் பெற முடி­யாத நியா­யத்­தினை சர்­வ­தே­சத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்றே தமிழ் மக்கள் நம்­பு­கின்­றனர்.

எனவே வட­மா­காண சபை என்ற வகையில் நாமும் சர்­வ­தேச அணு­கு­மு­றை­யினை எதிர்பார்க்­கின்றோம். தமிழ் மக்­களின் உரி­மைகள் மற்றும் நியாயம் தொடர்பில் நாம் தொடர்ந்தும் சர்­வ­தேச விசா­ர­ணை­க­ளுக்கு வலி­யு­றுத்­துவோம். எமது கோரிக்­கைகள் ஜனா­தி­ப­திக்கு விளங்­கா­வி­டினும் நாம் கேட்கும் நியா­யங்கள் சர்­வ­தே­சத்­திற்கு விளங்கும் என்ற நம்­பிக்கை எமக்குள்­ளது.

மேலும், சர்­வ­தேச தலை­யீட்­டினால் இலங்­கையில் பிரச்­சி­னைகள் வரும் என்­பதை நான் ஏற்றுக் கொள்­கின்றேன். எனினும், இவை அனைத்­தையும் நாமாக விரும்பிச் செய்­ய­வில்லை. அன்று அர­சாங்கம் நடந்து ­கொண்­டதன் விளை­வு­களை இன்று அதே அர­சாங்கம் அனு­ப­விக்­கின்­றது.

இறுதி யுத்­தத்தில் சுயா­தீ­ன­மா­கவும் நேர்­மை­யா­கவும் இரா­ணு­வத்­தினர் நடந்­தி­ருப்­பார்­க­ளாயின் அர­சாங்கம் இன்று சர்­வ­தே­சத்­திடம் அஞ்சத் தேவை­யில்லை. பொது மக்கள் மீது நடத்­தப்­பட்ட காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான தாக்­கு­தல்கள் தொடர்­பி­லான ஆதா­ரங்கள் அனைத்தும் சர்­வ­தே­சத்­திடம் உள்­ளன. அவர்­க­ளா­கவே இலங்கை தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர். இதில் எமது தூண்­டு­தல்கள் ஆரம்ப கட்­டத்தில் காணப்­ப­ட­வில்லை.

எமக்குத் தேவைப்­ப­டு­வ­தெல்லாம் எமது தமிழ் மக்கள் தொடர்பில் நியா­யமும் நிவா­ர­ணங்­க­ளுமே. இறுதிக் கட்ட யுத்­தத்தில் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்த பொது மக்கள் கொல்­லப்­பட்ட பொது மக்கள் மற்றும் வடக்கின் கட்­டுப்­பா­டு­களில் இருந்து விடு­தலை. இவை எமது நியா­ய­மான கோரிக்­கை­களே இதில் தேசத்­து­ரோக செயற்­பா­டுகள் எவையும் இல்லை.

அதே போல் மன்னார் திருக்­கே­தீஸ்­வரம் பிர­தேச புதை­குழி விட­யத்தில் நியா­ய­மான முடிவு கிடைக்­கப்­பட வேண்டும். இவ் புதை­கு­ழியில் கண்­டெ­டுக்­கப்­பட்ட எலும்புக் கூடுகள் யாருடையது. காணாமல் போனோர் இதில் தொடர்புபட்டிருக்க முடியுமா என்ற எமது கேள்விகளுக்கு உண்மையான முடிவை எதிர்பார்க்கின்றோம்.

இன்று அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரேரணையினை செயற்படுத்துவதாகக் குறிப்பிட்டாலும் அதில் உண்மைத் தன்மை இல்லை. ஆகவே சர்வதேச விசாரணைகள் மட்டுமே இன்று எமது ஒரே நம்பிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.

TAGS: