பிகேஎன்எஸ்: பணியாளர்கள் அதிகப்படியாக இருந்ததால் ஒப்பந்தப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர்

pkns20 ஒப்பந்தப்  பணியாளர்கள்  நீக்கப்பட்டதில்  வேலை  ஒப்பந்தமீறல்  எதுவும்  இல்லை  என பிகேஎன்எஸ் ஹோல்டிங்  கூறியுள்ளது.

பணியாளர்கள்  எண்ணிக்கை  மிகையாக  இருந்ததால்  அதைத்  “திருத்தி  அமைக்கும்  நடவடிக்கையாக”  அவர்களின்  ஒப்ந்தங்கள் முடிவுக்குக்  கொண்டுவரப்பட்டன  என  பிகேஎன்எஸ்  ஓர்  அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.

“அவர்களிடமுள்ள  அதே  திறமையும்  அனுபவமும்  பிகேஎன்எஸ்  நிரந்தரப்  பணியாளர்களிடம்  இருப்பதால்  அவர்களின்  ஒப்பந்தங்களை  நீட்டிக்க  வேண்டிய  அவசியமில்லை  என்ற  முடிவுக்கு  பிகேஎன்எஸ்  வந்தது”, என  அவ்வறிக்கை  கூறிற்று.