உயிருக்கு மிரட்டல் என தெரேசா கொக் போலீஸில் புகார்

1 kokசில  முஸ்லிம்  என்ஜிஓ-கள்  கோழிகளை  வெட்டி  அவற்றின்  இரத்தத்தைத்  தம்  உருவப்படம்  பொறிக்கப்பட்ட   பதாதை  மீது  பூசியதை  அடுத்து  தம்   பாதுகாப்புக்கு  மிரட்டல்  ஏற்பட்டிருப்பதாக  டிஏபி-இன்  சிபூத்தே  எம்பி  தெரேசா கொக்  போலீசிடம்   புகார்  செய்துள்ளார். 

தம்  மீது  ஆத்திரம்  உண்டாகும்படி  பேசியதுடன்  தம்  கன்னத்தில்  அறைவோருக்கு  ரிம500  வெகுமதி  கொடுப்பதாகவும்  கூறிய  என்ஜிஓ-களை  போலீஸ்  விசாரிக்க  வேண்டும்  எனவும்  அவர்  தம்  புகாரில்  கேட்டுக்கொண்டார்.

“எனக்கு பயமாக  இருக்கிறது.  அதனால்தான்  போலீசில்  புகார்  செய்தேன். ….போலீசார்  இதைக்  கடுமையாகக்  கருதி நடவடிக்கை  எடுக்க  வேண்டும்”,  என்றாரவர்.