பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்: 30 தீவிரவாதிகள் சாவு

pakistan terrorபாகிஸ்தானின் ஷாவல் பள்ளத்தாக்குப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாதுகாப்புப்படை சார்பில் கூறப்பட்டதாவது:

வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் எல்லையில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் மீது அதிகாலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதே வேளையில் வடக்கு வஜிரிஸ்தானின் காரியோம் கிராமத்திலும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. முக்கியமாக, தீவிரவாதிகள் பயிற்சி பெறும் தட்டா கேல் போன்ற பகுதிகளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தானுக்கு இடைப்பட்ட பகுதியை கைப்பற்றியிருந்த தீவிரவாதிகள் அங்கு மையங்கள் அமைத்து தற்கொலைப்படைத் தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்துள்ளனர் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.