கத்தார்: எரிவாயு சிலிண்டர் வெடித்து 12 பேர் பலி

dohaகத்தார் தலைநகர் தோஹாவில் எரிவாயு உருளை ஒன்று வெடித்ததில் 12 பேர் பலியாகியுள்ளனர், 30 பேர் காயமடைந்துள்ளதாக கத்தாரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் தோஹாவில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் வெளியே அமைந்துள்ள துருக்கி உணவு விடுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வெடி விபத்தின் தாக்கத்தில் அக்கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது, அங்கிருந்த பல கார்கள் சேதமடைந்துள்ளன, கட்டிடச் சிதிலங்கள் ஐம்பது மீட்டர் தூரம் வரை தூக்கி எறியப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் இரு சிறார்களும் பலியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் தோஹாவில் வேறு ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியாகினர், இதில் 13 பேர் சிறார்கள். -BBC